LOADING...
ஏஐ தொழில்நுட்பத்தால் சைபர் செக்யூரிட்டி வேலைவாய்ப்புகள் 11% அதிகரிப்பு: கிளாட் மைத்தோஸ், ஜிபிடி 5.4-சைபர் மாடல்களின் அசுர வளர்ச்சி
சைபர் செக்யூரிட்டி வேலைவாய்ப்புகள் 11% அதிகரிப்பு

ஏஐ தொழில்நுட்பத்தால் சைபர் செக்யூரிட்டி வேலைவாய்ப்புகள் 11% அதிகரிப்பு: கிளாட் மைத்தோஸ், ஜிபிடி 5.4-சைபர் மாடல்களின் அசுர வளர்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
May 25, 2026
08:13 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாடு மைத்தோஸ்' மற்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் 'ஜிபிடி 5.4-சைபர்' போன்ற அதிநவீன ஏஐ மாடல்களின் வருகையால், சைபர் செக்யூரிட்டி ஆலோசகர்களுக்கான வேலைவாய்ப்புகள் கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளன. கிளாஸ்டோர் (Glassdoor) வேலைவாய்ப்பு தளத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த புதிய ஏஐ மாடல்களால் மென்பொருள்களில் உள்ள பல பாதுகாப்பு ஓட்டைகள் கண்டறியப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மனிதர்களால் பல தசாப்தங்களாகக் கண்டுபிடிக்க முடியாத சாஃப்ட்வேர் குறைபாடுகளை இந்த ஏஐ மாடல்கள் மிக எளிதாகக் கண்டறிந்து விடுவதால், டிஜிட்டல் பாதுகாப்பை பலப்படுத்தப் புதிய நிபுணர்களின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளது.

புதிய ஏஐ தொழில்நுட்ப அச்சுறுத்தல்

27 ஆண்டுகால சாஃப்ட்வேர் ரகசியங்களை உடைத்த 'க்ளாடு மைத்தோஸ்' மற்றும் ஜீரோ டே அச்சுறுத்தல்

'கிளாடு மைத்தோஸ் ப்ரிவியூ' ஏஐ மாடலானது, மென்பொருள் உருவாக்குநர்களுக்கே தெரியாத 'ஜீரோ டே' (Zero Day) எனப்படும் மிக ஆபத்தான பாதுகாப்பு குறைபாடுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சில குறிப்பிட்ட சாஃப்ட்வேர் சிஸ்டம்கள் தொடங்கப்பட்டு சுமார் 27 ஆண்டுகள் ஆகியும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படாத ரகசியப் பிழைகளை இந்த ஏஐ மாடல் சில நிமிடங்களில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இதுமட்டுமின்றி, தற்போதைய மென்பொருள் உருவாக்குநர்கள் புதிய கோடடிங் எழுத ஏஐ டூல்களைப் பயன்படுத்துவதால், அந்த ஏஐ செய்யும் சிறு தவறுகள் காரணமாகப் புதிய சாஃப்ட்வேர்களில் எளிதாகப் பிழைகள் மற்றும் வைரஸ் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கூகுள் கிளவுட் எச்சரிக்கை

கார்ப்பரேட் நிறுவனங்களின் டிஜிட்டல் ரகசியங்களை அம்பலப்படுத்தும் ஏஐ ஏஜென்ட்கள்

இத்தகைய மென்பொருள் பிழைகள் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏஐ ஏஜென்ட்களும் (AI Agents) நிறுவனங்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் ரகசியத் தரவுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இது குறித்துப் பேசிய கூகுள் கிளவுட் நிறுவனத்தின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி பிரான்சிஸ் டி சோசா, ஏஐ ஏஜென்ட்கள் ஒரு நிறுவனத்தின் சிஸ்டம்களை ஆய்வு செய்யும்போது, பல ஆண்டுகால ரகசியத் தரவுகளைத் தன்னிச்சையாக வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். நிறுவனங்களால் நீண்ட நாட்களாக மறக்கப்பட்ட முக்கியத் தரவுத்தளங்களை இந்த ஏஐ ஏஜென்ட்டுகள் தேடிக் கண்டுபிடிப்பதால், நிறுவனங்களின் டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அலகுகளுக்குப் புதிய சவால்கள் முளைத்துள்ளன.

Advertisement

புதிய வேலைவாய்ப்பு துறைகள்

கல்லூரி பட்டதாரிகளுக்குப் பிரகாசிக்கும் 'ஏஐ இன்ஜினியர்' வேலைவாய்ப்புகள்

இந்தத் திடீர் ஏஐ புரட்சி காரணமாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் தங்களது டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளில் தற்பொழுது இறங்கியுள்ளன. லிங்க்டின் (LinkedIn) நிறுவனத்தின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி லியா கிஸ்னர் பேசுகையில், ஏஐ பாதுகாப்பு என்பது தற்காலிகமானது அல்ல என்றும், இன்னும் பல ஆண்டுகளுக்கு இதற்கான தேவை சந்தையில் நீடிக்கும் என்றும் கூறியுள்ளார். சைபர் செக்யூரிட்டி மட்டுமின்றி, கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகளுக்கு 'ஏஐ இன்ஜினியர்' (AI Engineer) என்கிற வேலைவாய்ப்பு தற்பொழுது மிக வேகமாக வளர்ந்து வரும் முதன்மைத் துறையாக மாறியுள்ளதாக லிங்க்டின் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement