Loading...
செயற்கை நுண்ணறிவு (AI) நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல்: சீன உளவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
AI பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக சீன மாநில பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்

செயற்கை நுண்ணறிவு (AI) நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல்: சீன உளவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 14, 2026
06:28 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக சீன மாநில பாதுகாப்பு அமைச்சர் சென் யிக்சின் எச்சரித்துள்ளார். 'சீனா சைபர்ஸ்பேஸ்' இதழில் அவர் எழுதிய கட்டுரையில், எதிரிகளால் AI தவறாக பயன்படுத்தப்பட்டால், அது சீனாவின் அரசியல், அமைப்பு சார்ந்த மற்றும் சித்தாந்த பாதுகாப்பிற்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்து

AI அமைக்கும் ஆபத்துகள்

எதிரிப் படைகள் 'டீப்ஃபேக்' தொழில்நுட்பம், AI உருவாக்கிய எழுத்துக்கள், படங்கள் மற்றும் சோஷியல் மீடியா போட்களை பயன்படுத்தி அரசியல் வதந்திகளை பரப்பவும், சமூக பிளவுகளை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

AI மூலமாக இயங்கும் வெப் கிராலர்கள், தரவுச் சுரங்கம் ஆகியவை மூலமாக அந்நிய உளவு அமைப்புகள் சீனாவின் அரசுத் தரவுகள், வர்த்தக ரகசியங்கள் மற்றும் தனிநபர் விபரங்களைச் சேகரிக்கக்கூடும்.

பொதுமக்களின் கருத்துகள் மற்றும் அரசியல் போக்குகளைத் திசைதிருப்ப தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது குறித்து உலகளவில் கவலைகள் அதிகரித்து வருகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், இணைய பாதுகாப்பை(Cybersecurity) மேலும் வலுப்படுத்தவும் சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலகளாவிய தொழில்நுட்ப தலைவர்களும் AI வளர்ச்சியில் கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகள் தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT