உலகின் அதிவேக இணையத்தை அறிமுகப்படுத்தியது சீனா
செய்தி முன்னோட்டம்
ஒரு வினாடிக்கு 1.2 டெராபிட் வேகத்தில் தரவை அனுப்ப முடியும் என்று உருதி கூறி, சீன நிறுவனங்கள் 'உலகின் அதிவேக இணைய' நெட்வொர்க்கை வெளியிட்டன.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி , இந்த வேகம் தற்போதைய முக்கிய இணைய வழிகளை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டம் சிங்குவா பல்கலைக்கழகம், சீனா மொபைல், ஹவாய் டெக்னாலஜிஸ் மற்றும் செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு ஒத்துழைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
3,000 கிலோமீட்டருக்கு மேல் பரவியுள்ள இந்த நெட்வொர்க் பெய்ஜிங், வுஹான் மற்றும் குவாங்சோவை, ஒரு விரிவான ஆப்டிகல் ஃபைபர் கேபிளிங் சிஸ்டம் மூலம் இணைக்கிறது.
card 2
ஒரு நொடியில் 150 உயர்-வரையறை படங்களை பகிரும் வேகம் கொண்ட இன்டர்நெட்
உலகின் பெரும்பாலான இணைய நெட்வொர்க்குகள் வினாடிக்கு 100 ஜிகாபிட் வேகத்தில் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அமெரிக்காவும், அதன் ஐந்தாம் தலைமுறை இணையம்2க்கு, வினாடிக்கு 400 ஜிகாபிட் வேகத்திற்கு மேம்படுத்தியது.
ஜூலையில் செயல்படுத்தப்பட்டு, கடந்த திங்களன்று (நவம்பர் 13) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, அனைத்து செயல்பாட்டு சோதனைகளையும் விஞ்சி நம்பகத்தன்மையுடன் செயல்பட்டது இந்த நெட்ஒர்க் என அந்நாட்டின் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.
சீனாவின் அதிவேக நெட்ஒர்க் எவ்வளவு வேகமானது என்பதை தெளிவுபடுத்த , Huawei டெக்னாலஜிஸ் துணைத் தலைவர் வாங் லீ, "ஒரு நொடியில் 150 உயர்-வரையறை படங்களை பகிர்வதற்கு சமமான திறன் கொண்டது" என்று கூறியுள்ளார்.