புதிய லோகோ, ஏழு சிறப்பு திட்டங்கள்: 5Gக்கு தயாரான பிஎஸ்என்எல்
அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், புதிய ஆரஞ்சு நிறத்தை முன்னிறுத்தி தேசியக் கொடியை பிரதிபலிக்கும் மூவர்ண லோகோவை வெளியிட்டுள்ளது. அதோடு மக்களுக்காக 7 புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்தது. பல கோடி பயனர்களுக்கு சேவைகள் வழங்கும் பிஎஸ்என்எல், சமீபத்தில் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக 5ஜி சேவைகளை வழங்குவதற்கான முயற்சியில், ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் புதிய லோகோவை வெளியிட்டனர். இப்புதிய லோகோவில் "கனெக்டிங் இந்தியா" என்ற வார்த்தை "கனெக்டிங் பாரத்" என மாற்றப்பட்டுள்ளது. கூடுதலாக 7 புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Twitter Post
7 புதிய திட்டங்கள் என்னவென்று பார்ப்போம்
ஸ்பேம் கால்களை தானாக பிளாக் செய்யும் தொழில்நுட்பம்: தேவையில்லாத அழைப்புகளைத் தவிர்க்க. இலவச வைஃபை ரோமிங் சேவை: BSNL ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள், நாட்டின் எங்கு சென்றாலும், பிஎஸ்என் ஹாட்ஸ்பாட்டைப் பயன்படுத்தலாம். ஃபைபர் அடிப்படையிலான டிவி சேவை: 500 தொலைக்காட்சி அலைவரிசைகளை நேரலையில் காணலாம், மேலும் இதற்காக ஃபைபர் பிராட்பேண்ட் டேட்டா கட்டணம் இல்லாமல். தானியங்கி கியாஸ்குகள்: சிம் கார்டுகளை வாங்க, மாற்ற மற்றும் ரிசார்ஜ் செய்ய. சு ரங்க நடவடிக்கைகளுக்கான 5ஜி நெட்வொர்க்:C-DAC உடன் இணைந்து உருவாக்கப்பட்டது, இது உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பை மேம்படுத்துகிறது. D2D இணைப்பு: செயற்கைக்கோள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை இணைக்கும் புதிய சேவையாகும். எண்கள்: பயனர்கள் இணையத்தில் தனித்துவமான மொபைல் எண்களை வாங்கி கொள்ள முடியும்.