NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புதிய லோகோ, ஏழு சிறப்பு திட்டங்கள்: 5Gக்கு தயாரான பிஎஸ்என்எல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய லோகோ, ஏழு சிறப்பு திட்டங்கள்: 5Gக்கு தயாரான பிஎஸ்என்எல்
    5Gக்கு தயாரான பிஎஸ்என்எல்

    புதிய லோகோ, ஏழு சிறப்பு திட்டங்கள்: 5Gக்கு தயாரான பிஎஸ்என்எல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 23, 2024
    07:56 am

    செய்தி முன்னோட்டம்

    அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், புதிய ஆரஞ்சு நிறத்தை முன்னிறுத்தி தேசியக் கொடியை பிரதிபலிக்கும் மூவர்ண லோகோவை வெளியிட்டுள்ளது.

    அதோடு மக்களுக்காக 7 புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்தது.

    பல கோடி பயனர்களுக்கு சேவைகள் வழங்கும் பிஎஸ்என்எல், சமீபத்தில் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்தது.

    அதன் தொடர்ச்சியாக 5ஜி சேவைகளை வழங்குவதற்கான முயற்சியில், ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் புதிய லோகோவை வெளியிட்டனர்.

    இப்புதிய லோகோவில் "கனெக்டிங் இந்தியா" என்ற வார்த்தை "கனெக்டிங் பாரத்" என மாற்றப்பட்டுள்ளது. கூடுதலாக 7 புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Address at the unveiling of BSNL's new logo and launch of seven new services https://t.co/wpqQx5Gd4F

    — Office Of JM Scindia (@Officejmscindia) October 22, 2024

    திட்டங்கள்

    7 புதிய திட்டங்கள் என்னவென்று பார்ப்போம்

    ஸ்பேம் கால்களை தானாக பிளாக் செய்யும் தொழில்நுட்பம்: தேவையில்லாத அழைப்புகளைத் தவிர்க்க.

    இலவச வைஃபை ரோமிங் சேவை: BSNL ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள், நாட்டின் எங்கு சென்றாலும், பிஎஸ்என் ஹாட்ஸ்பாட்டைப் பயன்படுத்தலாம்.

    ஃபைபர் அடிப்படையிலான டிவி சேவை: 500 தொலைக்காட்சி அலைவரிசைகளை நேரலையில் காணலாம், மேலும் இதற்காக ஃபைபர் பிராட்பேண்ட் டேட்டா கட்டணம் இல்லாமல்.

    தானியங்கி கியாஸ்குகள்: சிம் கார்டுகளை வாங்க, மாற்ற மற்றும் ரிசார்ஜ் செய்ய. சு

    ரங்க நடவடிக்கைகளுக்கான 5ஜி நெட்வொர்க்:C-DAC உடன் இணைந்து உருவாக்கப்பட்டது, இது உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

    D2D இணைப்பு: செயற்கைக்கோள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை இணைக்கும் புதிய சேவையாகும்.

    எண்கள்: பயனர்கள் இணையத்தில் தனித்துவமான மொபைல் எண்களை வாங்கி கொள்ள முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிஎஸ்என்எல்

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    பிஎஸ்என்எல்

    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் 5G
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா இந்தியா
    அடுத்த வருடம் BSNL 5ஜி சேவை தொடங்கப்படும்: மத்திய அமைச்சர்! இந்தியா
    ஜார்கண்ட் மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். டவரை திருட முயன்ற 6 நபர்கள் கைது மாநிலங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025