டிக்டாக் செயலிக்கு தடைவிதித்த ஆஸ்திரேலியா அரசு - இப்படி ஒரு காரணமா?
டிக் டாக் செயலியை இந்தியாவில் ஏற்கனவே தடை செய்திருந்த நிலையில், பின் அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா அரசும் டிக்டாக் செயலியை தடை செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தெரிவிக்கையில், டிக்டாக் செயலியால் ஏற்படும் பாதங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கையின்படி தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், சீனா ByteDanceLtd நிறுவனத்துடன் தரவுகளை பயன்படுத்தலாம் என்ற அச்சத்திலேயே இந்த தடையை ஆஸ்திரேலியா எடுக்க முடிவு செய்துள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று டிக் டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.