LOADING...
உங்க ஐடி கார்டு ரெடி! வாட்ஸ்அப்பில் வரும் இந்த மெசேஜை நம்பாதீங்க! மாணவர்களைக் குறிவைக்கும் புதிய மோசடி!
APAAR ID பெயரில் வாட்ஸ்அப்பில் பரவும் போலி மெசேஜ்

உங்க ஐடி கார்டு ரெடி! வாட்ஸ்அப்பில் வரும் இந்த மெசேஜை நம்பாதீங்க! மாணவர்களைக் குறிவைக்கும் புதிய மோசடி!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 22, 2026
05:53 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை' (APAAR ID) திட்டத்தைப் பயன்படுத்தி புதிய வகை ஆன்லைன் மோசடி ஒன்று பரவி வருகிறது. மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், "உங்களுடைய APAAR ID வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது" என்ற செய்தி அனுப்பப்படுகிறது. இது முற்றிலும் போலியானது என்று கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செய்தியில் என்ன இருக்கிறது?

மோசடிக்காரர்கள் அனுப்பும் செய்தியில், ஒரு குறிப்பிட்ட ஐடி எண் கொடுக்கப்பட்டு, அது உங்களது டிஜிலாக்கர் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகளைப் பெற உடனடியாக ஆதார் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும், அதற்காக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். இதனைப் பார்த்தவுடன் மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் உண்மையென நம்பி அந்த லிங்கை கிளிக் செய்ய வாய்ப்புள்ளது.

மோசடி

இது ஏன் மோசடி என அழைக்கப்படுகிறது?

நேரடித் தொடர்பு கிடையாது: APAAR ID என்பது பள்ளிகள் அல்லது கல்வி நிறுவனங்கள் மூலம் மட்டுமே முறையாக உருவாக்கப்படும். அரசாங்கம் நேரடியாக எந்த ஒரு மாணவருக்கும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பாது. தனிப்பட்ட விவரங்கள்: ஆதார் எண் அல்லது ஓடிபி கேட்டு வரும் எந்த ஒரு செய்தியும் சந்தேகத்திற்குரியது. அதிகாரப்பூர்வமான அரசு அமைப்புகள் வாட்ஸ்அப் வழியாக இத்தகைய விவரங்களைக் கோர மாட்டார்கள். போலி லிங்குகள்: இந்த மெசேஜில் வரும் லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கைபேசி அல்லது கணினியில் உள்ள ரகசியத் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.

Advertisement

செய்ய வேண்டியவை

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

பள்ளியை அணுகுங்கள்: உங்களது APAAR ID குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், நேரடியாகப் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நேரடியாகப் பார்க்கவும்: உங்களுக்கு மெசேஜ் வந்தால், அதில் உள்ள லிங்கை கிளிக் செய்வதற்குப் பதிலாக, நேரடியாக டிஜிலாக்கர் ஆப் அல்லது இணையதளத்திற்குச் சென்று 'Issued Documents' பகுதியில் சரிபார்க்கவும். விவரங்களைப் பகிர வேண்டாம்: தெரியாத நபர்களிடமிருந்து வரும் செய்திகளுக்குப் பதில் அளிக்கவோ, ஆதார் மற்றும் வங்கி விவரங்களைப் பகிரவோ வேண்டாம். புகார் அளிக்கவும்: இத்தகைய சந்தேகத்திற்குரிய செய்திகள் வந்தால், உடனடியாக அந்த எண்ணை ஸ்பேம் எனப் புகாரளிக்கவும் அல்லது சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் செய்யவும்.

Advertisement