NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சூரியனை ஆய்வு செய்ய இறுதி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூரியனை ஆய்வு செய்ய இறுதி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம் 

    சூரியனை ஆய்வு செய்ய இறுதி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 06, 2024
    05:36 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்து முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது.

    கிட்டத்தட்ட 126 நாட்கள் பூமியில் இருந்து பயணம் செய்த ஆதித்யா L1 விண்கலம், இன்று மாலை 4 மணியளவில், முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் உள்ள ஹேலோ சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.

    பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை சுற்றி காந்தப்புலன்கள் மற்றும் ஈர்ப்புவிசைகள் இருக்கும், அந்த காந்தப்புலன்களும் ஈர்ப்புவிசைகளும் இருக்கும் இடத்தில இருந்து ஆய்வை மேற்கொண்டால் பல இடையூறுகள் ஏற்படும்.

    சவ்க்க்

    இந்தத் திட்டம் ஏன் முக்கியமானது? 

    அப்படிப்பட்ட இடையூறுகள் ஏதும் இல்லாத, சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் ஒரு புள்ளியை லெக்ராஞ்சு புள்ளி என்று அழைக்கிறார்கள்.

    சூரியன் மற்றும் பூமிக்கு இடையே அந்த புள்ளி இருக்கிறது.

    அந்த புள்ளியை ஆதித்யா-எல்1 இன்று அடைந்துவிட்டதால், ஒரே இடத்தில் நிலைத்திருந்து சூரியனை விரிவாக ஆய்வு செய்து துல்லியமான கணிப்புகளை ஆதித்யா எல்1-ஆல் வழங்க முடியும்.

    மேலும், சூரியனில் இருந்து வரும் சூரிய கதிர்கள் மற்றும் கொரோனால் மாஸ் எஜெக்ஷன் என பூமியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள் தோன்றக்கூடும்.

    எனவே, சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் இவ்வாறான ஆபத்துக்களை உடனடியாக அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், சூரியனைப் பற்றிய புரிதலையும் வளர்த்து கொள்ள முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆதித்யா L1
    இஸ்ரோ

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    2023-ல் 75 மில்லியன் வரை உயர்ந்த உலகளாவிய மக்கள் தொகை உலகம்
    கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்  ஜே.என்.1 வகை
    நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள் பிரான்ஸ்
    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்? பாகிஸ்தான்

    ஆதித்யா L1

    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் விண்வெளி
    ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்? விண்வெளி
    எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை அழித்த சூரிய புயல்களை ஆய்வு செய்ய இருக்கிறது ஆதித்யா-L1 இஸ்ரோ
    ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1' இஸ்ரோ

    இஸ்ரோ

    செயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி ஆதித்யா L1
    சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது ஆதித்யா-L1 ஆதித்யா L1
    சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர், ஏன்? சந்திரயான் 3
    நிலவில் நாளை சூரிய உதயம்; விக்ரம் லேண்டர் செயல்படும் என்னும் நம்பிக்கையில் இஸ்ரோ சந்திரயான் 3
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025