Page Loader
10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல்
ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல்

எழுதியவர் Siranjeevi
Mar 17, 2023
06:36 pm

செய்தி முன்னோட்டம்

சாதாரண மனிதனின் அதிகாரம் என்ற வகையில் அறிமுகமான ஆதார் அடையாள அட்டை இன்று, இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக விளங்குகிறது. மத்திய அரசின் தகவலின்படி, ஒவ்வொரு குடிமகனின் சேவைகளை வழங்கவும், ஆதார் எண் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், ஆப்லைனில் மட்டுமல்லாமல் ஆன்லைன் சேவையிலும் ஆதார் விஷயங்கள் உடனே முடிந்துவிடுகிறது. இந்நிலையில், 10 ஆண்டு நிறைவடைந்த ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதில், அனைவருக்கும் யூ.ஐ.டீ.ஏ.ஐ. என்ற ஆதார் எண் வழங்கி ஆதார் அட்டை ஆவணம் மூலம் நலத்திட்ட உதவிகள், வங்கி சேவை, பத்திர பதிவுக்கு ஆவணமாக்கப்படுகிறது.

ஆதார் அட்டை

10 வருடம் ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - தகவல்

எனவே, மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பங்களுக்கான அமைச்சகம், ஆதார் எண் வழங்கப்பட்டு 10 ஆண்டு நிறைவடைந்தவர்கள் தங்கள் அடையாள போட்டோ, முகவரி ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம், முகவரிக்காக அடையாள ஆவணத்தை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும் என கூறினார். அதாவது மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை மட்டுமே இந்த இலவச சேவை கிடைக்கும். 'மை ஆதார்' எனும் தளத்தில் இலவசமாக இந்த புதுப்பிப்பு பணியை மேற்கொள்ள முடியும். https://www.myaadhaar.uidai.gov.in/ இணைய தளத்தில், மை ஆதார் செயலியிலும் அப்டேட் டாக்குமென்ட' என்ற பிரிவையும் பயன்படுத்தலாம். பொதுமக்கள் இத்தளத்தில் ரூ.25 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம். அல்லது ஆதார் மையம் சென்று ரூ.50 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம்.