NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் 
    சில சுற்றுலா தலங்கள் பருவமழை காலத்தில் மட்டுமே இயங்கக் கூடியவை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2023
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    பருவமழை காலங்களில் களைகட்டும் பல சுற்றுலா தலங்கள் இருக்கிறது.

    அருவிகள், மலர் கண்காட்சிகள் போன்றவைகளை பருவமழை காலத்தில் சென்று பார்ப்பதே ஒரு தனி சுகம் தான்!

    அதிலும், சில சுற்றுலா தலங்கள் பருவமழை காலத்தில் மட்டுமே இயங்கக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.

    அப்படிப்பட்ட, பருவமழை காலத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 4 முக்கிய இந்திய சுற்றுலா தலங்களை இப்போது பார்க்கலாம்.

    பூக்களின் பள்ளத்தாக்கு, உத்தரகாண்ட்

    மலையேறுவது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால், உத்தரகாண்டில் உள்ள மலர்கள் பள்ளத்தாக்கு இருக்கும் தேசிய பூங்காவிற்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும்.

    யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான இந்த பூங்காவில், மழைக் காலத்தில் மட்டுமே பூக்கும் ஆர்க்கிட்கள் மற்றும் அரிதான ஆல்பைன் தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    சஜிக்

    மின்மினிப் பூச்சி திருவிழா, மகாராஷ்டிரா

    ஒவ்வொரு ஆண்டும், பருவமழை வருவதற்கு முன்பு, மகாராஷ்டிராவின் புருஷ்வாடியில் மின்மினிப் பூச்சி திருவிழா கொண்டாடப்படுகிறது.

    பருவமழைக்கு முன்பு, மின்மினிப் பூச்சிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால், இந்த காலகட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மின்மினிப் பூச்சிகளை இந்த திருவிழாவில் காண முடியும்.

    துத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவா

    கோவா மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள துத்சாகர் நீர்வீழ்ச்சி பருவமழைக் காலத்தின் போது மட்டுமே அதன் முழு அழகையும் பெறுகிறது என்பதால் இதை 'மிஸ்' பண்ணிடாதீங்க!

    சோர்லா மலைத்தொடர்ச்சி, கோவா

    இந்த மலைத்தொடர்ச்சியில் உள்ள மரங்களில் வளரும் சிறிய மைசீனா காளான்கள் இரவுகளில் நியான் பச்சை நிறத்தில் மின்னக்கூடிய தன்மை உடையவை. அதனால், இந்த மலைக்காடுகள் 'அவதார்' திரைப்படத்தில் வரும் வேற்றுகிரகம் போல் இரவுகளில் மாறிவிடுமாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுலா

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஏப்ரல் 2026இல் பொதுத்தேர்தல் நடைபெறும் என தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவிப்பு பங்களாதேஷ்
    ஹார்வர்டின் வெளிநாட்டு மாணவர்களுக்கு டிரம்ப் விதித்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது நீதிமன்றம் அமெரிக்கா
    அசாமில் வெள்ளத்தால் 5.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு அசாம்
    கனடா பிரதமரிடமிருந்து ஜி7 உச்சி மாநாட்டிற்கான அழைப்பைப் பெற்றார் பிரதமர் மோடி கனடா

    சுற்றுலா

    ஷெங்கன் விசா பெறுவதற்கு எளிமையான நடைமுறைகளை பின்பற்றும் சில நாடுகள் உலகம்
    சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத் சென்னை
    கிரீஸிற்க்கு சுற்றுலா செல்கிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இதோ உலகம்
    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்! ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025