NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வாஸ்து நம்பிக்கை உள்ளவர்களா? இந்த செடிகளை, ஒருபோதும் வீட்டிற்குள் வளர்க்காதீர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாஸ்து நம்பிக்கை உள்ளவர்களா? இந்த செடிகளை, ஒருபோதும் வீட்டிற்குள் வளர்க்காதீர்கள்
    வாஸ்துபடி வீட்டிற்குள் வளர்க்ககூடாத செடிகள்

    வாஸ்து நம்பிக்கை உள்ளவர்களா? இந்த செடிகளை, ஒருபோதும் வீட்டிற்குள் வளர்க்காதீர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 08, 2023
    02:35 pm

    செய்தி முன்னோட்டம்

    வீட்டின் உட்புற அழகை மேம்படுத்த பலர் வீட்டிற்குள்ளும் செடிகளை வளர்க்கிறார்கள். சில செடிகள் மருத்துவ குணங்கள் உடையது என்றும், அவற்றை வீட்டிற்குள் வளர்த்தால் நன்மைகள் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

    இருப்பினும், வாஸ்து சாஸ்திர நிபுணர்கள், சில செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பதால், எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். அது எவ்வகை செடிகள் என்று பார்ப்போமா?

    கற்றாழை/கள்ளி செடி: வீட்டிற்கு அழகு சேர்க்கும் என்பற்காக கள்ளி செடிகளும், கற்றாழை செடிகளும் வைப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால் வாஸ்து சாஸ்திர படி, வீட்டிற்குள் வைக்கப்படும் முட்செடியினால், உங்களுக்கு துரதிருஷ்டங்கள் ஏற்படலாம்.

    போன்சாய்: செயற்கையாக வளர்க்கப்படும் இந்த குட்டி செடிகள், பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், வீட்டிற்குள் வைக்க கூடாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    வாஸ்து

    இறந்த செடிகளை வெளியேற்றுங்கள்

    மருதாணி: திருமணம் போன்ற மங்கள நிகழ்விற்கு முக்கிய பங்கு வகிக்கும் மருதாணி செடியை, வீட்டிற்குள் வளர்க்க கூடாது. இந்த செடியை தீய சக்திகள் எளிதில் அண்டும் என்பதால், இதை வீட்டிற்குள் வைக்க கூடாது என்கின்றனர் வாஸ்து வல்லுநர்கள்.

    பருத்தி செடி: தொட்டிகளில் அழகாக இருக்கும் இந்த பனி வெள்ளை நிற தாவரங்கள், வீட்டிற்குள் வளர்வதால் துரதிர்ஷ்டம் ஏற்படும் எனவும், பலவித எதிர்மறை விளைவுகள் ஏற்படும் எனவும் கூறுகிறார்கள்.

    இறந்த தாவரங்கள்: வாஸ்துபடி, பச்சை மற்றும் புதிய தாவரங்கள் நேர்மறை அதிர்வுகளை ஈர்க்கும். அதே நேரத்தில், இறந்த இலைகள் அல்லது செடிகள், வீட்டிற்குள் கெட்ட சகுனங்களை ஏற்படுத்தும். அதனால், பட்டு போன இலைகளையும், இறந்த செடிகளையும் வெளியில் வைக்க வேண்டும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025