NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நவராத்திரி 2024: தேவியின் ஒன்பது அவதாரங்களும், அவற்றின் மகத்துவமும்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவராத்திரி 2024: தேவியின் ஒன்பது அவதாரங்களும், அவற்றின் மகத்துவமும்!
    தேவியின் ஒன்பது அவதாரங்கள்

    நவராத்திரி 2024: தேவியின் ஒன்பது அவதாரங்களும், அவற்றின் மகத்துவமும்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 30, 2024
    09:25 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த வாரம் துவங்கவுள்ளது நவராத்திரி திருவிழா. வடமாநிலங்களில் இந்த 9 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி முடிவடைகிறது இந்த நவராத்திரி.

    இந்துக்களுக்கு முக்கியமான பண்டிகையாக பார்க்கப்படும் இந்த விழா, குறிப்பாக மேற்கு வங்காளத்தில் சிறப்பாக கொண்டாடப்படும்.

    தமிழ்நாட்டில், இந்த ஒன்பது நாளும், பலரும் தங்கள் இல்லத்தில் கொலு வைத்து கொண்டாடுவர்.

    ஆதி சக்தியின் அவதாரமான துர்கை அம்மனை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வடிவங்களில், அதாவது மொத்தம் ஒன்பது வடிவங்களில் வணங்குவர்.

    இறுதியாக, அரக்கன் மகிஷாசுரனை வதம் செய்த மகிஷாசுரமர்தினியை வணங்கி இந்த கொண்டாட்டத்தை நிறைவு செய்வார்கள்.

    அந்த சக்தி வாய்ந்த நவதுர்கைகள் யார், அவர்களின் பெயர் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

    தினம் 1

    ஷைல்புத்ரி

    தன் தீக்குளிப்புக்குப் பிறகு, சக்தி, இமயமலையின் மகளாகப் பிறந்தாள்.

    இந்த வடிவத்தில், அவள் பெயர் ஷைல்புத்ரி.

    சமஸ்கிருதத்தில் 'ஷைல்' என்றால் மலை என்று பொருள்.

    எனவே, 'ஷைல்புத்ரி' என்றால் மலையின் மகள் என்று பொருள். நவராத்திரியின் முதல் நாளில் ஷைல்புத்ரி தேவி வழிபடப்படுகிறாள்.

    துர்க்கை அம்மனின் முதல் வடிவம் இவள்.

    மலை அரசனான இமவான் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.

    இவர் தனது, முந்தைய அவதாரத்தில் தட்சனின் மகளாக பிறந்ததால், 'தாட்சாயினி' என்றும் குறிப்பிடப்படுகிறார்.

    இவர் தான் சிவனை திருமணம் செய்தபின் பார்வதி தேவி ஆவார்.

    ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக விளங்குகின்றார். இவரின் வாகனம் நந்தி, ஆயுதம் சூலம்.

    தினம் 2

    பிரம்மச்சாரிணி

    நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை, பிரம்மசாரிணி தேவி.

    'பிரம்ம' என்றால் தபஸ், அதாவது தவம் செய்தல் என்று பொருள்.

    மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. ஆயுதம் கிடையாது.

    இந்த துர்க்கைக்கு வாகனமும் இல்லை.

    சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார்.

    இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது.

    இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார் என்பது புராணக் கதை.

    அறிவு, ஞானம், நன்றி நிறைந்த பிரம்மச்சாரிணியை வணங்குவதன் மூலம் பொறுமையைத் தர வல்லவள். அதோடு சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவர்.

    தினம் 3

    சந்திரகாண்டா

    சந்திரகாண்டா தேவி, பார்வதியின் திருமணமான அவதாரம்.

    சிவபெருமானை மணந்த பிறகு, தேவி தனது நெற்றியை, பிறை சந்திரனால் அலங்கரித்ததால், சந்திரகாண்டா தேவி என்று அழைக்கப்பட்டார்.

    'சந்திர' என்றால் நிலவு. 'காண்டா' என்றால் மணி என்று பொருள்.

    நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னை வணங்கப்படுகிறார்.

    சந்திர காண்டா, பத்து கைகளை கொண்டு, நீதியை நிலைநாட்ட, போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருகின்றார். இவரின் வாகனம் சிங்கம்.

    தினம் 4

    குஷ்மாண்டா

    பார்வதி தேவி தேவியின் இந்த அவதாரம், படைத்தலை குறிக்கிறது. குஷ்மாண்டா தேவி, சூரிய மண்டலத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.

    சூரியனை போல, வாழும் சக்தியும், ஆற்றலும் தருபவள். மேலும் அவரது உடலின் பிரகாசமும் சூரியனைப் போலவே ஒளிரும் என பொருள்.

    இந்த தேவி, எட்டு கைகளைக் கொண்டவளாதலால், அஷ்டபுஜா தேவி என்றும் அழைக்கப்படுகிறாள்.

    நவராத்திரி விழாவின் 4ஆம் நாளான சதுர்த்தி தினத்தன்று 'குஷ்மாண்டா' வடிவ துர்க்கையை வணங்குவது வழக்கம்.

    இவரை வணங்குவோர் உடல் , மன வலிமை பெறுவர்.

    தினம் 5

    ஸ்கந்தமாதா

    ஸ்ரீ ஸ்கந்த மாதா, நவராத்திரி விழாவின் 5ம் நாளில் வணங்கப்படுகின்றாள்.

    பார்வதி தேவி, ஸ்கந்தன்/முருகன்/கார்த்திகேயனின் தாயாக மாறியபோது, ​​அவர் ஸ்கந்தமாதா என்று அழைக்கப்பட்டார்.

    பார்வதி தேவியின் இந்த வடிவத்தை வழிபடும் பக்தர்களுக்கு முருகனின் அருளும் கிடைக்கும்.

    ஸ்கந்தமாதாவின் உருவம், உக்கிரமான சிங்கத்தின் மீது அமர்ந்து, குழந்தை முருகனை மடியில் வைத்துள்ளது போல இருக்கும்.

    இவர் தேவர்கள், மனிதர்களுக்கு பகைவர்களாக விளங்கிய சூரபத்மனை (தாரகாசுரனை) வதம் செய்தவள்.

    தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகனின் தாயாகவும் மதிக்கப்படுபவள்.

    தினம் 6

    காத்யாயனி

    மகிஷாசுரனை அழிக்க, பார்வதி தேவி காத்யாயனி தேவியாக உருவெடுத்தாள். இது பார்வதி தேவியின் போர் வடிவமாகும்.

    நவராத்திரியின் ஆறாம் நாளில் காத்யாயனியை வழிபடுவது வழக்கம்.

    முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். அவருக்கு காதயா என்ற மகன் இருந்தார்.

    ஆனால் ஒரு மகளை வேண்டி, முனிவர் காதா கடும் தவம் செய்து, துர்க்கையை மகளாக பெற்றார்.

    இதனால் இவருக்கு 'காத்யாயனி' என்ற பெயர் வந்தது.

    இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.

    தினம் 7

    காளராத்திரி/காளி

    ஷும்பன் மற்றும் நிசும்பன் அரக்கர்களைக் கொல்ல, பார்வதி தேவி தனது தங்கத் தோலை அகற்றியபோது, ​​அவள் காளராத்திரி தேவி என்று அழைக்கப்பட்டாள்.

    அவள் பார்வதி தேவியின் உக்கிரமான வடிவமாக அறியப்படுகிறாள்.

    காள என்றால் நேரத்தையும், மரணத்தையும் குறிக்கும்.

    ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும். நவராத்திரி திருவிழாவின் ஏழாம் நாளில் 'காளராத்திரி' யை வழிபடுவது வழக்கம்.

    இந்த துர்க்கை வடிவம், எதிரிக்கும் அச்சத்தைத் தரக்கூடியது.

    இவளின் நான்கு கைகளின், ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது.

    தினம் 8

    மஹாகௌரி

    முற்காலத்தில் மஹாகௌரி, ஈசனை மணம் செய்து கொள்ள வேண்டி, கடுமையாக தவம் மேற்கொண்டார்.

    அப்போது அவரின் உடலை மண் சூழ்ந்து கருமையாக்கியது.

    இவரின் தவத்தை மெச்சிய சிவன், இவரை மணந்து கொள்வதாக கூறினார்.

    ஆனால் அதற்கு முன் கங்கை நீரில் நீராடினார். அப்போது தேவியின் உடல் பால் போன்று வெண்மையாக மாறியதால் இவர் மஹாகௌரி என்று அழைக்கப்பட்டாள்.

    மஹாகௌரி தேவி, வெண்ணிற ஆடைகளை மட்டுமே அணிவதால், ஸ்வேதாம்பரதாரா என்றும் அழைக்கப்படுகிறாள்.

    மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும்.

    தினம் 9

    சித்திதாத்ரி

    இந்து மத நூல்களின்படி, பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் உருவமற்ற ஆதி-பராசக்தியை - சக்தியை - ருத்திரன் பிரார்த்தனை செய்தார்.

    அவள் சிவபெருமானின் இடது பாதியில் இருந்து சித்திதாத்ரி வடிவத்தில் தோன்றினாள்.

    அதன் பிறகு சிவனுக்கு அர்த்த-நாரீஸ்வர் என்ற பெயர் வந்தது. தன் பக்தர்களுக்கு எல்லாவிதமான சித்திகளையும் பெற்று அருளும் தேவி அவள்.

    சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம். நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் 'சித்தி தாத்ரி' துர்க்கை வழிபாடு செய்வர்.

    'சித்தி' என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றாள் அருள்பவள், அதாவது சக்தியை அருள்பவள் என்று பொருள்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவிழா
    பண்டிகை
    வடமாநிலங்கள்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    திருவிழா

    திருப்பதி தேவஸ்தான கோரிக்கையினை ஏற்க மறுத்த மத்திய அரசு  மத்திய அரசு
    பழநி முருகன் கோயிலில் முடி காணிக்கை செய்தவர்களின் புகைப்படத்துடன் இலவச டிக்கெட்  அறநிலையத்துறை
    வார இறுதி நாட்கள், கோயில் திருவிழாக்கள்-தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்  தமிழ்நாடு
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்  விருதுநகர்

    பண்டிகை

    புரட்டாசி ஸ்பெஷல்: மெதுவடை இப்படி செய்து பாருங்க! ருசியா இருக்கும் புரட்டாசி
    'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி  நரேந்திர மோடி
    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  நவராத்திரி
    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? தமிழ்நாடு

    வடமாநிலங்கள்

    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? நவராத்திரி
    வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள் விஜயதசமி
    வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை சென்னை
    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025