NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மம்ப்ஸ்  வைரஸைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மம்ப்ஸ்  வைரஸைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை 

    கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மம்ப்ஸ்  வைரஸைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2024
    05:34 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவுவது கடுமையாக அதிகரித்துள்ளது.

    மார்ச் மாதத்தில் மட்டும் அந்த மாநிலத்தில் 2,500 பரவல்கள் பதிவாகியுள்ளன.

    மார்ச் 10ஆம் தேதி அன்று ஒரே நாளில் 190 பரவல்கள் அம்மாநிலத்தில் பதிவாகியது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மொத்தத்தில், 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 11,467 வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.

    மலப்புரம் மாவட்டம் மற்றும் பிற வடக்கு பகுதிகளில் இந்த காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது.

    எனவே, இது போன்ற தொற்றுகளின் மாதிரிகளை சேகரித்து PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் நோய் பரவலைக் கண்காணிக்கும் பணியை சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.

    கேரளா 

    மம்ப்ஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள்

    மம்ப்ஸ் என்பது பாராமிக்ஸோவைரஸால் ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். பாதிக்கப்பட்ட நபரின் மேல் சுவாசக் குழாயில் இருந்து தும்மல், இருமல் மூலம் வரும் நீரின் மூலம் மற்றவர்களுக்கும் இது பரவுகிறது.

    இந்த தொற்று நோய் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் பரவக்கூடியது.

    இந்த நோய் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு மம்ப்ஸ்-தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியை போட வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    உமிழ்நீர் சுரப்பிகளில் வீக்கம் மற்றும் வலி, லேசான காய்ச்சல், தசை வலி, பசியின்மை, பொது அசௌகரியம் மற்றும் தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

    நோய்த்தொற்று ஏற்பட்டு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    கேரளா

    'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு  சென்னை
    கிரைம் ஸ்டோரி: கேரளாவில் 6 வயது சிறுமி கடத்தப்பட்டதில், கைதான மூன்று நபர்கள்; என்ன நடந்தது?  கடத்தல்
    தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம் ரஜினிகாந்த்

    சுகாதாரத் துறை

    புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    தமிழக மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் - சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை  தமிழ்நாடு
    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025