NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சர்வதேச புலிகள் தினம்: புலிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச புலிகள் தினம்: புலிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 
    புலிகளுக்கு தண்ணீரில் வேட்டையாடவும் தெரியும்.

    சர்வதேச புலிகள் தினம்: புலிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 29, 2023
    05:42 pm

    செய்தி முன்னோட்டம்

    புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

    புலிகள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காகவும், அவற்றின் உலகளாவிய எண்ணிக்கையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நாளில், புலிகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம்.

    பெரும்பாலான வீட்டு மற்றும் காட்டுப் பூனைகளைப் போலல்லாமல், புலிகள் தண்ணீரில் நனைவதை விரும்புகின்றன.

    அவைகளை விட்டால் மணிக்கணக்கில் தண்ணீரில் நீந்தி கொண்டிருக்கும்.

    அதனால், புலிகளுக்கு தண்ணீரில் வேட்டையாடவும் தெரியும்.

    ஒரு புலி ஒரே நாளில் 30 கிலோமீட்டர் தூரம் வரை நீந்தியதாக ரந்தம்பூர் தேசிய பூங்காவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

    புலி குட்டிகள் இயற்கையாகவே பார்வையற்றவைகளாக பிறக்கின்றன.

    வ்ஜ்ல்க்

    புலிகள் மனிதர்களை தங்கள் இரையாக கருதுவதில்லை

    இதனால்தான், சில புலிகள் சிறு குட்டியாக இருக்கும் போதே இறந்து விடுகின்றன.

    பார்வையற்ற புலிகள் தங்களது தாய் புலியின் வாசத்தை வைத்தே வெளியே நடமாடும்.

    இதனால், பெரும்பாலான புலிகள் உணவில்லாமலோ வானிலை மாற்றங்கள் காரணமாகவோ இறந்துவிடுகின்றன.

    சில குட்டி புலிகளை அதனுடைய தந்தையே அடித்து சாப்பிட்டுவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வீட்டுப் பூனைகளைப் போலவே, புலியின் உமிழ்நீரும் கிருமி நாசினியாகும்.

    ஏனெனில் அவைகளின் உமிழ்நீரில் லைசோசைம் என்சைம்கள் உள்ளன. இது காயங்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

    பொதுவாக, புலிகள் கூச்ச சுபாவமுள்ளவை. அதிலும், மனிதர்களை கண்டால் அவைகளே புதருக்குள் சென்று ஒழிந்துகொள்ளும் சுபாவம் உடையவை.

    அவைகளை தொந்தரவு செய்தால் அல்லது காயப்படுத்த முயற்சித்தால் மட்டுமே அவை மனிதர்களை தாக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025