NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள்
    நவராத்திரி தொடங்கியதையொட்டி தமிழகத்தில் கொலு பொம்மைகளை விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள்

    எழுதியவர் Srinath r
    Oct 15, 2023
    01:05 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வீட்டில் விதவிதமான கொலு பொம்மைகள் வைத்து மக்கள் வழிபடுவர்.

    நவராத்திரி என்றால் என்ன, கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவதின் பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    சிவனை வழிபடுவது சிவராத்திரி என்றால், அம்பிகையை வழிபடுவது நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. 'நவம்' என்றால் ஒன்பது என்று பொருள்.

    அம்பாளை ஒன்பது ராத்திரிகள் வழிபடுவதால் இந்த விழாவிற்கு நவராத்திரி என பெயர் வந்தது. மேலும் அம்பாள், மகிஷாசுரனை வதம் செய்ய 9 நாட்கள் தவம் இருந்ததால் தான் நவராத்திரியை 9 நாட்களுக்கு கொண்டாடுகிறோம்.

    2nd card

    எதற்காக கொலு வைக்கப்படுகிறது?

    முப்பெரும் தேவியராக விளங்கக்கூடிய மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவரும் தவம் செய்து ஒரே ரூபத்தில் வந்து மகிஷாசுரனை வதம் செய்ததாக நம்பப்படுகிறது.

    இவ்வளவு பிரசித்தி பெற்ற நவராத்திரி விழாவை, வீட்டில் ஒன்பது நாட்களுக்கு கொலுவைத்து கொண்டாடப்படுகிறது.

    மூன்று, ஐந்து, ஒன்பது, பதினோரு படிகள் வரை கொலு வைத்து மக்கள் கொண்டாடுவார்கள்.

    கொலு வைப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது, படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர்கிறது என்று உணர்த்துவதற்காக என்றும்,

    உயிரினங்கள் எப்படி படிப்படியாக தோன்றின என்பதின் வெளிப்பாடாகவும்,

    இறுதியாக மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் படிப்படியாக தான் முன்னேற வேண்டும் என்ற வாழ்வியல் நெறிமுறையை காட்டுவதற்காகவும் கொலு வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

    3rd card

     கொலு வைக்கும் முறை-1

    தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ள ஓரறிவு, ஈரறிவு, மற்றும் மூன்று அறிவு என அவற்றின் அறிவு கேட்ப பொம்மைகளை கீழிருந்து மேலாக கொலு வைக்க வேண்டும்.

    ஓரறிவு உயிரினங்களான மரம், செடி, கொடிகளை முதல் படியிலும், ஈரறிவு உயிரினங்களான நத்தை, சங்கு உள்ளிட்டவற்றை இரண்டாம் படியிலும் வைக்க வேண்டும்.

    மூன்று அறிவு உயிரினங்களான கரையானை மூன்றாவது படியில் வைக்க வேண்டும். நான்கறிவு உயிரினமான நண்டை நான்காவது படியில் வைக்க வேண்டும்.

    ஐந்து அறிவு கொண்ட பறவைகளையும், விலங்குகளையும் ஐந்தாவது படியில் வைத்து வழிபட வேண்டும். ஆறாவது படியில் மனிதர்களின் பொம்மைகளை வைக்கலாம்.

    4th card

    கொலு வைக்கும் முறை-2

    ஏழாவது படி மனிதர்களில் இருந்து மகான்களாக, ஞானிகளாக உயர்ந்தவர்களின் படி. இதில் சுவாமி விவேகானந்தர், வள்ளலார் உள்ளிட்டவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.

    எட்டாவது படிக்கட்டு அவதாரங்களுக்கான படி. அதில் 'தசாவதாரம்', 'அஷ்டலட்சுமி' அவதார பொம்மைகள் உள்ளிட்டவற்றை வைக்கலாம்.

    ஒன்பதாவது படியில், முப்பெரும் தேவியர், மும்மூர்த்திகள், மற்றும் பூரண கலசத்தை வைத்து வழிபடலாம். சிலர் பூரண கலசத்தை முதல் படியிலும் வைத்து வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு கொலு வைத்து 9 நாட்களுக்கு விரதமிருந்து அம்பாளை மக்கள் வழிபடுவர். வீட்டில் கொலு வைப்பதால் முப்பெரும் தேவிகளின் அருள் கிடைக்கும் எனவும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கூடும் எனவும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் எனவும் நம்பப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    பல்வேறு கோவில்களில் நவராத்திரி பூஜைகள் ஆரம்பம் 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கியது

    மேலும் படிக்க : https://t.co/sKwrZiOVgE#navratri #ceremony #tirupati #MMNews #Maalaimalar pic.twitter.com/nyZ6OiHOHW

    — Maalai Malar தமிழ் (@maalaimalar) October 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நவராத்திரி
    கோவில்கள்
    திருவிழா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நவராத்திரி

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  திருவிழா

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    இன்று மஹாவீரர் ஜெயந்தி: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025