LOADING...
இந்த மாதிரி தலைவலியை சாதாரணமா விடாதீங்க; உடனடியாக கவனிக்க வேண்டிய ஆபத்தான அறிகுறிகள்
உடனடியாக கவனிக்க வேண்டிய ஆபத்தான தலைவலி அறிகுறிகள்

இந்த மாதிரி தலைவலியை சாதாரணமா விடாதீங்க; உடனடியாக கவனிக்க வேண்டிய ஆபத்தான அறிகுறிகள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2025
12:10 pm

செய்தி முன்னோட்டம்

தலைவலி என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும், சில சமயங்களில் அது தீவிரமான நரம்பியல் பிரச்சனைகள் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம் என நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தினசரி தலைவலிக்கும், உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் ஆபத்தான அறிகுறிகளுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்வது அவசரச் சிகிச்சைக்கு உதவும்.

தலைவலி

பொதுவான தலைவலிகள்

இந்தியாவில் ஆண்டுதோறும் 67%க்கும் அதிகமான பெரியவர்களைத் தலைவலி பாதிக்கிறது. இதில் பின்வரும் பெரும்பாலானவை ஆபத்தில்லாதவையாகும். பதட்டத் தலைவலி (Tension Headaches) தலையின் இருபுறமும் அழுத்தத்துடன் கூடிய மந்தமான வலி இருக்கும். இது பொதுவாக மன அழுத்தம் அல்லது அதிக வேலை காரணமாக ஏற்படுவதாகும். ஒற்றைத் தலைவலி (Migraines) எனப்படும் ஒருபக்க வலி, துடிக்கும் உணர்வு, குமட்டல், ஒளி மற்றும் ஒலியைத் தாங்க முடியாத உணர்வு ஆகியவை இருக்கும். இது அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும். கொத்துத் தலைவலி (Cluster Headaches) என்பது ஒரு கண்ணைச் சுற்றி தாங்க முடியாத கடுமையான வலி ஏற்படும்.

ஆபத்தான அறிகுறிகள்

உடனடியாக கவனிக்க வேண்டிய ஆபத்தான அறிகுறிகள்

பின்வரும் அறிகுறிகளுடன் தலைவலி ஏற்பட்டால், அது மூளை இரத்தக்கசிவு, பக்கவாதம், கட்டி அல்லது உயர் இரத்த அழுத்த நெருக்கடியின் (Hypertensive Emergency) அறிகுறியாக இருக்கலாம் என்பதால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். திடீரென்று இடி இடிப்பது போல் ஏற்படும் வெடிப்புத் தலைவலி. தலைவலியுடன் பலவீனம், பேசுவதில் சிரமம், முகத்தின் ஒரு பகுதி தொங்குதல். காய்ச்சல், தடிப்புகள் அல்லது கழுத்தில் விறைப்புடன் கூடிய தலைவலி. 50 வயதிற்குப் பிறகு புதிதாகத் தொடங்கும் தலைவலி. சிரமப்பட்டு வேலை செய்யும்போது ஏற்படும் தலைவலி. கர்ப்ப காலத்தில் வீக்கம் அல்லது உயர் இரத்த அழுத்தத்துடன் தலைவலி.

பரிசோதனை

நரம்பியல் பரிசோதனை

வழக்கமான தலைவலியை விட வலி அதிகரித்தால், அல்லது வலி நிவாரண மாத்திரைகள் வேலை செய்யாவிட்டால், நரம்பியல் பரிசோதனை அவசியம். தலைவலி பொதுவானதாக இருக்கலாம், ஆனால் ஆபத்தான அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருப்பது உயிரைக் காக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.