NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்; மொபைல் ஆப் மூலம்  ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைக்கும் வசதி அறிமுகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்; மொபைல் ஆப் மூலம்  ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைக்கும் வசதி அறிமுகம்
    ஆயுஷ்மான் ஆப் மூலம் வய வந்தனா அட்டை வழங்கத் தொடங்கியது மத்திய அரசு

    மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்; மொபைல் ஆப் மூலம்  ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைக்கும் வசதி அறிமுகம்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 28, 2025
    03:24 pm

    செய்தி முன்னோட்டம்

    முதியோருக்கு சுகாதார வசதி கிடைப்பதை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் (PM-JAY) கீழ் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தி உள்ளது.

    இதன்படி, ஆயுஷ்மான் செயலி மூலம் வய வந்தனா அட்டையை வழங்க தொடங்கியுள்ளது.

    இந்த அட்டை, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் ₹5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சையை வழங்குகிறது.

    இந்த முயற்சி இந்தியாவின் வயதான மக்களுக்கு பணமில்லா சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    தேசிய சுகாதார ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் PM-JAY, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகள் சிகிச்சை பெற அனுமதிக்கிறது.

    எப்படி பதிவு செய்வது

    செயலியில் எப்படி பதிவு செய்வது?

    ஆயுஷ்மான் மொபைல் ஆப்பில் பதிவு செய்ய, பயனர்கள் ஆயுஷ்மான் செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

    பின்னர் ஆதார் மற்றும் இருப்பிட விவரங்களை வழங்க வேண்டும், தேவைப்பட்டால் இ-கேஒய்சியை நிரப்ப வேண்டும்.

    சரிபார்க்கப்பட்டவுடன், அட்டையை நேரடியாக செயலியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

    ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே இருந்தால், வயதுத் தகுதியை நிர்ணயிப்பதற்கு ஆதாரில் உள்ள ஆண்டின் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தகுதியாக பரிசீலிக்கப்படும்.

    இந்த அட்டை மூலம் டயாலிசிஸ், பிடிசிஏ போன்ற இதய நடைமுறைகள் மற்றும் பேஸ்மேக்கர் பொருத்துதல், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சை, பக்கவாத பராமரிப்பு மற்றும் பல போன்ற முக்கிய சிகிச்சைகளை உள்ளடக்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதியோர் நலம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    முதியோர் நலம்

    மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது? முதியோர் பராமரிப்பு
    30-50 வயதுக்குட்பட்டோர் குறைவான நேரம் தூங்குகிறார்கள் -புதிய ஆய்வின் ரிப்போர்ட் தூக்கம்

    மத்திய அரசு

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியுடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது பஹல்காம்
    பஹல்காம் தாக்குதலை கண்டித்து அனைத்துக் கட்சி கூட்டம்; பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமனதாக கண்டனம் பஹல்காம்
    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன? பயங்கரவாதம்
    பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரைத் தடுக்க இந்தியாவின் 3 கட்டத் திட்டம் இதுதான் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025