NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இதென்ன ஆச்சரியம்! கொண்டாடும் நாட்களில் கூட ஒரு உணவுச்சங்கிலி இணைப்பு வருகிறதே!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இதென்ன ஆச்சரியம்! கொண்டாடும் நாட்களில் கூட ஒரு உணவுச்சங்கிலி இணைப்பு வருகிறதே!
    இன்று சர்வதேச சிட்டுக்குருவி தினம்

    இதென்ன ஆச்சரியம்! கொண்டாடும் நாட்களில் கூட ஒரு உணவுச்சங்கிலி இணைப்பு வருகிறதே!

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 20, 2023
    05:34 pm

    செய்தி முன்னோட்டம்

    உங்களுக்கு தெரியுமா? இன்று (மார்ச் 20) உலக சிட்டுக்குருவிகள் தினம். ஊர் முழுக்க பறந்து பறந்து படித்திருந்த இந்த அழகிய பறவை, அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளதை அடுத்து, அதை பாதுகாக்கும் நோக்கோடு, இந்த நாளை உலகமெங்கும் பறவை மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனுசரிக்கின்றனர்.

    இதில் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால், இதை தொடர்ந்து கொண்டாடப்படும் அடுத்த 2 நாட்களுக்கும், சிட்டுக்குருவிக்கும் சம்மந்தம் உண்டு!

    ஆம், ஒரு உணவு சங்கிலி தொடர் போல, நாளை, (மார்ச் 21), வனஉயிரினங்கள் தினமாகவும், அதை தொடர்ந்து அடுத்த நாள் (மார்ச் 22) தண்ணீர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    இது எதேச்சையாக அமைந்ததா அல்லது திட்டமிட்டு அனுசரிக்கப்படுகிறதா என்பது குறித்து இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை.

    சிட்டுக்குருவி

    சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்

    சுதந்திரத்தின், அடையாளமாக பேசப்பட்ட சிட்டுக்குருவிகள், கடந்த 20 ஆண்டுகளாக, அழிவு நிலையை சந்தித்து வருகிறது. முன்காலங்களில், வீடுகளில், மரங்களில் என எங்கும் கூவி, கூவி பறந்த சிட்டுக்குருவிகள், தற்போது தேடினாலும் கிடைப்பது,அரிதினும் அரிதாகிவிட்டது. அதிலும், நகரத்தில் குருவிகளே இல்லை எனலாம்.

    நகரத்தில் அதிகரித்துள்ள செல்போன் டவர்களும், அதில் இருந்து வெளி வரும் கதிர்வீச்சுகளும் தான் சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு காரணமாக கூறப்பட்டாலும், அதற்குரிய ஆதாரமாக எதுவும் இன்னும் சமர்பிக்கப்படவில்லை.

    இந்நாளில், சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது மட்டுமின்றி, அழிவு நிலையில் இருக்கும் மற்ற பறவை இனங்களையும் காப்போம் என சபதம் எடுப்போம். ஏனெனில், உணவு சங்கிலியில், முக்கியமான பறவைகள் அழிந்து விட்டால், மனித இனமும் விரைவில் அழிவு பாதையில் செல்லும் என்பது தான் நிதர்சனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலகம்

    ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு தமிழ்நாடு
    நித்யானந்தாவின் கைலாசா: உலகில் வேறு என்னென்ன குறு நாடுகள் உள்ளன உலக செய்திகள்
    170 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களில் மிதக்கின்றன உலக செய்திகள்
    மூன்றாவது முறை அதிபராக தேர்தெடுக்கப்பட்டார் சீனாவின் ஜி ஜின்பிங் உலக செய்திகள்

    வைரல் செய்தி

    ஏ.ஆர்.அமீன், பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பியதை அடுத்து, அறிக்கை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் ஏஆர் ரஹ்மான்
    மும்பையில் விக்கி-நயன் ஜோடி; வைரலாகும் புகைப்படங்கள் நயன்தாரா
    ஒரே போன் காலில், ஒரு லட்சத்தை இழந்த நடிகை நக்மா கோலிவுட்
    தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கிய அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ பள்ளி மாணவர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025