கோடை காலத்தில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்: காரணங்கள் மற்றும் தீர்வுகள்!
செய்தி முன்னோட்டம்
கோடைகாலத்தில் உங்களுடைய இரத்த சர்க்கரை (Blood sugar) அளவு அதிகரிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நீங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் கூட, இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வெயில் காலத்தில், உடலில் நீர்ச்சத்து குறைந்து போவது மற்றும் தாதுக்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படுவது எனப் பல உடலியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் உங்களின் இரத்த சர்க்கரை அளவை நேரடியாகப் பாதிக்கக்கூடியவை ஆகும். கோடைகாலத்தில் இரத்த சர்க்கரை அளவு ஏன் அதிகரிக்கிறது, அதனை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பது பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.
#1
அதிக தாகம் எடுப்பது ஓர் அறிகுறி!
கோடைகாலத்தில் அதிகளவில் தாகம் எடுப்பது என்பது ஒரு சாதாரணமான விஷயம்தான். ஆனால், இது உங்களுடைய இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகவும் இருக்கலாம். உங்களுக்குத் தொடர்ந்து அதிகப்படியான தாகம் எடுக்கிறது என்றால், உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரை நீங்கள் குடிக்கவில்லை என்று அர்த்தம். உடலில் நீர்ச்சத்து குறையும் போது, தாதுக்களின் சமநிலை தவறி, அது இரத்த சர்க்கரை அளவை நேரடியாகப் பாதிக்கக்கூடும். இந்தப் பாதிப்பிலிருந்து நம் உடலைப் பாதுகாத்துக் கொள்ள, தினமும் குறைந்தது 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும்.
#2
அதிகச் சோர்வு என்பது ஓர் அபாய அறிகுறி!
கோடைகாலத்தில் நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகச் சோர்வை உணர்கிறீர்கள் என்றால், அது உங்களுடைய இரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். கடுமையான வெ வெப்பத்தின் காரணமாக, உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க நம் உடல் வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்; இதனால் இயல்பாகவே சோர்வு ஏற்படும். இதனுடன் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடும், தாதுக்களின் சமநிலை சீர்குலைவதும் இந்தச் சோர்வை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. இந்தத் தீவிரச் சோர்விலிருந்து விடுபட, போதிய அளவு தண்ணீர் குடிப்பதுடன், தாதுக்கள் நிறைந்த மோர், உப்பிட்ட எலுமிச்சை நீர் போன்ற சர்க்கரை இல்லாத ஆரோக்கியமான திரவ உணவுகளையும் உட்கொள்வது மிகவும் அவசியமாகும்.
#3
அதிகப் பசி எடுப்பது ஒரு முக்கியப் பிரச்சனை!
கோடைகாலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான பசி எடுப்பது என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு சாதாரணமானப் பிரச்சனைதான். இது உங்களுடைய இரத்த சர்க்கரை அளவு மாறுபடுவதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகவும் இருக்கலாம். கடுமையான வெயிலைச் சமாளிக்க உடலுக்குக் கூடுதல் ஆற்றல் தேவைப்படுவதால், சில நேரங்களில் பசி உணர்வு அதிகமாகலாம். இதனுடன், உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடும், தாதுக்களின் சமநிலை சீர்குலைவதும் கூட ஒருவிதப் போலிப் பசி உணர்வை ஏற்படுத்தி, பசியை மேலும் அதிகப்படுத்தலாம். இந்தபிரச்சனையிலிருந்து விடுபட, தினமும் குறைந்தது 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடிப்பதுடன், சர்க்கரை சத்துக்கள் இல்லாத, தாதுக்கள் நிறைந்த மோர், உப்பிட்ட எலுமிச்சை நீர் போன்ற ஆரோக்கியமான திரவ உணவுகளையும், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும் உட்கொள்வது மிகவும் அவசியமாகும்.
#4
அதிக வியர்வை என்பது ஓர் அறிகுறி!
கோடைகாலத்தில் அதிகப்படியாக வியர்ப்பது என்பதும் உங்களுடைய இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கக்கூடிய ஒரு காரணியாகும். கடுமையான வெயிலின் காரணமாக, உடலின் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக வைத்திருக்க நம் உடல் அதிகளவில் வியர்வையை வெளியேற்றுகிறது. உடலின் இந்த மாற்றத்தால் இன்சுலின் உணர்திறன் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. உடலில் இன்சுலினின் செயல்பாட்டைக் குறைத்து இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இந்தபிரச்சனையிலிருந்து நம் உடலைபாதுகாத்துக் கொள்ள, தினமும் குறைந்தது 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும். அதுமட்டுமன்றி, தாதுக்கள் நிறைந்த மோர், உப்பிட்ட எலுமிச்சை நீர் போன்ற சர்க்கரை இல்லாத ஆரோக்கியமான திரவ உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், முடிந்தவரை வெப்பம் அதிகம் இல்லாத, குளிர்ச்சியான இடங்களில் இருக்கவும் முயற்சிக்க வேண்டும்.
#5
உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துங்கள்!
நம்முடைய அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் தகுந்த கவனம் செலுத்துவது என்பது ரொம்பவே முக்கியமானது ஆகும். ஏனெனில், முறையற்ற அல்லது தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் உங்களின் இரத்த சர்க்கரை அளவை நேரடியாகப் பாதிக்கக்கூடும். கோடைகாலத்தில் புதிய, தூய்மையான பழங்களையும், காய்கறிகளையும் அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில், அவற்றில் வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. இவை உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கப் பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமன்றி, எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளையும், சர்க்கரைச் சத்து அதிகமாக உள்ள குளிர்பானங்கள் போன்ற செயற்கைப் பானங்களையும் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, உங்களின் இரத்த சர்க்கரை அளவைச் சட்டென்று உயர்த்திவிடக் கூடிய ஆபத்துக்களைக் கொண்டுள்ளது.