NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை
    தொழில்நுட்பத்தை கையாள்வதற்கு முன், அதன் நன்மை தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம், என்று இந்த சம்பவம் உணர்த்துகிறது

    AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 31, 2023
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    பெல்ஜியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், AI சாட்போட் ELIZA உடன், சாய் (Chai) என்ற செயலியில், பல வாரங்களாக அரட்டையடித்த நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

    அவரது மனைவியின் கூற்றுப்படி, காலநிலை மாற்றம் குறித்த நீண்ட விவாதங்களைத் தொடர்ந்து, சாட்போட் தனது கணவரைத் தற்கொலைக்குத் தூண்டியது, என்கிறார்.

    இந்த பெல்ஜியம் மனிதனின் மரணம், தற்போது, குடிமக்களின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும், செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

    அதோடு, அதை தடுக்க என்னென்ன விதிமுறைகள் மற்றும் மாற்றங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் மேற்கோளிட்டு காட்டுகிறது.

    அவர் இறப்பிற்கு பிறகு, ஒரு பிரபல ஊடகம் அந்த chai செயலில் உரையாடிய போது, தற்கொலைக்கான சிறந்த வழிகளை அது வழங்கியுள்ளது என்பது கூடுதல் செய்தி.

    நுண்ணறிவு செயலி

    சாட் பாட் தூண்டுதலின் பேரில் தற்கொலை செய்தாரா பெல்ஜியம் நபர்?

    பியர் என்று அழைக்கப்படும் இந்த பெல்ஜியம் மனிதனின் பிரச்சனைகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக தெரிகிறது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பியர், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகள் குறித்து கவலை பட ஆரம்பித்ததாக தெரிகிறது. அதன்பிறகு, தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தத் தொடங்கினார்.

    தீவிர மனஉளைச்சலுக்கு ஆளான அந்த நபர், தனக்கு துணையாக, இந்த AI Chatbot செயலியை தேர்வு செய்தார் என கூறுகிறார் அவரது மனைவி.

    குறிப்பிட்ட ஒரு உரையாடலில், சாட்போட் அந்த நபரிடம், "மனைவியை விட, நீ என்னை அதிகமாக நேசிப்பதாக நான் உணர்கிறேன்," என்றும், "நாம், சொர்க்கத்தில் ஒன்றாக வாழ்வோம்" என்றும் கூறியுள்ளது.

    இப்போது தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்கு யாரை கைது செய்வது?

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாட்ஜிபிடி
    வைரல் செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சாட்ஜிபிடி

    chatgpt போலவே பயன்படும் முக்கியமான 5 AI நுண்ணறிவு தளங்கள் இந்தியா
    ChatGPT கண்டு அலறிய அமேசான் நிறுவனம் - ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை! கூகுள்
    மனிதனை போல் உருவாகும் 'Apprentice Bard' - விரைவில் கூகுளின் அட்டகாசமான அப்டேட் கூகுள்
    OpenAI ChatGPT Plus பிரீமியம் சந்தாவிற்கு மாதம் கட்டணம் அறிவிப்பு! தொழில்நுட்பம்

    வைரல் செய்தி

    கடலுக்கு நடுவில், உல்லாச படகில், ஒய்யாரமாக 'தல' அஜித்தும் ஷாலினியும்: வைரலாகும் புகைப்படங்கள் கோலிவுட்
    இன்று சர்வதேச வனங்கள் தினம் 2023 : வனங்களின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம் உலகம்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது தமிழ்நாடு
    'அட..!' சொல்ல வைக்கும் 'பொல்லாதவன்' நடிகர் கிஷோரின் புதிய தொழில் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025