NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை
    மத்திய அமைச்சர் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் - துப்பாக்கி பறிமுதல்

    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை

    எழுதியவர் Nivetha P
    Sep 01, 2023
    03:22 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரான கவுஷல் கிஷோருக்கு சொந்தமான வீடு ஒன்று உத்தரப்பிரதேசம், லக்னோவில் அமைந்துள்ளது.

    இந்த அமைச்சருக்கு விகாஸ் என்னும் மகன் உள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் வினய்சீனிவாசன் என்னும் இளைஞர் இன்று(செப்.,1)அதிகாலை லக்னோ வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

    இறந்து கிடந்த இளைஞரின் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து பலத்தக்காயங்களுடன் அவர் இறந்து கிடந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதனைத்தொடர்ந்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் மத்திய அமைச்சரின் மகனான விகாஸுக்கு இறந்துக்கிடந்த இளைஞர் வினய்சீனிவாசன் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது.

    விசாரணை 

    சந்தேகத்தின் பேரில் அமைச்சர் மகனின் நண்பர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை 

    மேலும் அங்கு விகாஸ் கிஷோருக்கு சொந்தமான உரிமம் பெற்ற துப்பாக்கி கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து நேற்றிரவு 6 பேர் ஒன்றாக அமைர்ந்து உணவு அருந்தியுள்ளதாகவும், அதன் பின்னர் தான் இந்த கொலை நடந்துள்ளது என்னும் தகவலும் விசாரணையில் வெளிவந்துள்ளது.

    ஆனால் இச்சம்பவம் நடந்தபொழுது தனது மகன் அங்கில்லை, டெல்லியில் இருந்தார் என்று மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதனிடையில் மரணமடைந்த வினய் சீனிவாசனின் சகோதரர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு புகார் அளித்துள்ளாராம்.

    அதன் பேரில் தற்போது காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் விகாஸ் நண்பர்கள் மூவரை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே விகாஸின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    உத்தரப்பிரதேசம்
    கொலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    காவல்துறை

    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது  திருச்சி
    பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கைது  பெங்களூர்
    உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி உத்தரகாண்ட்

    காவல்துறை

    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  சிறை
    டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி டெல்லி
    தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்  உத்தரப்பிரதேசம்
    மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் மேற்கு வங்காளம்

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காவல்துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் நேபாளம்
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025