NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா
    இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா(H2N3) மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

    டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா

    எழுதியவர் Sindhuja SM
    Mar 24, 2023
    10:08 am

    செய்தி முன்னோட்டம்

    உலக வங்கியின் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அஜய் பங்கா டெல்லி வந்திருக்கும் நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது வழக்கமான சோதனையின் போது கண்டறியப்பட்டதாக கருவூலத் துறை நேற்று(மார் 23) தெரிவித்துள்ளது.

    அஜய் பங்கா, அவரது உலக சுற்றுப்பயணத்தை முடிப்பதற்காக டெல்லி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா(H2N3) மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

    நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி, 140 நாட்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 1300ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியா

    அஜய் பங்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்: கருவூலத் துறை

    மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் டெல்லி வந்து, பிரதமர் மோடி, எஸ் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க இருந்த அஜய் பங்காவின் "உலகளாவிய கேட்பு சுற்றுப்பயணம்" இந்திய பயணத்துடன் முடிவடைகிறது.

    "வழக்கமான சோதனையின் போது, ​​அஜய் பங்காவுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. உள்ளூர் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்" என்று கருவூலத் துறை வியாழன் மதியம் தெரிவித்தது.

    புது டெல்லியில் 84 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று புதன்கிழமை அன்று வெளியிடப்பட்ட சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    உலக வங்கி

    உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன் அமெரிக்கா

    இந்தியா

    10ல் 3 பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றனர்: ஆய்வில் தகவல் இந்தியா
    இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி மோடி
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு விமானப்படை
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025