NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - சென்னை ஆணையர் விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - சென்னை ஆணையர் விளக்கம் 
    மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - சென்னை ஆணையர் விளக்கம்

    மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - சென்னை ஆணையர் விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 15, 2023
    05:41 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டத்தின் படி, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி, தற்போது சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

    அதில், "கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை செயல்படுத்த வரும் 24ம் தேதி முதல் விண்ணப்பங்களை சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவே இதற்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது. ஒரே நாளில் மக்கள் டோக்கன் வாங்க வர வேண்டாம். அடுத்தடுத்து முகாம்கள் இதற்காக நிச்சயம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வரும் 17ம்தேதி முதல் சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    விளக்கம் 

    ஒவ்வொரு நியாயவிலை கடைகளிலும் ஒரு அலுவலர் நியமனம் 

    மேலும், 10 லட்சம் விண்ணப்பங்கள் தற்போது அச்சடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு நியாயவிலை கடைகளிலும் ஒரு அலுவலர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவுவதற்கு இருப்பார் என்றும்,

    கைரேகை பதிவிற்கு பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு நியாயவிலைக்கடைகளிலும் வைக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பெண்களுக்கு வங்கிக்கணக்கு இல்லையெனில், கூட்டுறவு வங்கிகளில் அவர்களுக்கு புதிதாக கணக்கு துவக்கித்தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் வீடு வீடாக தன்னார்வலர்கள் மூலம் இதற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ள நிலையில், குடும்ப தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு அமைக்கப்படும் சிறப்பு முகாம்கள் ஒரு பகுதியில் 2 இடங்களில் அமைக்கப்படவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    சென்னையிலுள்ள 1,417 நியாயவிலைக்கடைகளில், 3,550 முகாம்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சென்னை

    விரைவில் வருகிறது படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் - ரயில்வே அதிகாரிகள்  வந்தே பாரத்
    திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம்  மெட்ரோ
    50 ஆண்டுகளை பூர்த்தி செய்த சென்னை அண்ணா மேம்பாலம்  கருணாநிதி
    சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு  மேயர் பிரியா

    மு.க ஸ்டாலின்

    கிண்டி மருத்துவமனை: முதலமைச்சர் ஸ்டாலின் திறக்கப்போகிறாரா? திரௌபதி முர்மு
    தமிழர் பிரதமரானால் மகிழ்ச்சி, தமிழிசைக்கு வாய்ப்பு கொடுக்கலாம் - மு.க.ஸ்டாலின்  அமித்ஷா
    இந்தி மொழியினை திணிப்பதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது - முதல்வர் குற்றச்சாட்டு  மத்திய அரசு
    நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்  மருத்துவத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025