NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்
    இந்தியா

    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்

    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்
    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022, 06:24 pm 1 நிமிட வாசிப்பு
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்
    திருப்பதி ஏழுமலையான் கோயில்

    ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் அமைந்துள்ள தங்கக் கோபுரத்திற்கு பொன் முலாம் பூசப்பட்ட புதிய தகடுகளை மாற்றும் பணி நடைபெறவுள்ளது. இந்த பணி நிறைவடைய 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்பட்ட நிலையில், அந்த பணிகள் முடியும் வரை ஏழுமலையான் கோயில் கருவறை மூடப்பட்டிருக்கும் என்று சில ஊடகங்களில் செய்திகள் பரவியது. இதற்கு கடுமையான எதிர்ப்பினை திருப்பதி தேவஸ்தான ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால் தீட்சதுலு தெரிவித்து, இது குறித்த விளக்கத்தினை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர், "கோபுரத்திற்கு புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை மாற்றும் பொழுது பாலாலயம் செய்யப்படும்" என்றும்,

    வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று தகவல்

    அப்போது வேறு ஒரு மூலவரை ஏற்பாடும் செய்யும் பணிகள் நடக்கும். முன்னதாக 1957-58ம் ஆண்டில் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட பொழுதும், 2018ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்ட பொழுதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும், "அதே போல் இப்பொழுதும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும், பாலாலயம் செய்யப்பட்டு புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள மூலவரையும் கண்டு வழிபடலாம். எனினும், மூலவருக்கு நடக்கும் கட்டண சேவைகள் அனைத்தும் ஏகாந்தமாக நடைபெறும். அதே நேரத்தில் உற்சவருக்கு நடத்தும் கல்யாண உற்சவம், கட்டண பிரமோற்சவம் ஆகியவைகளுக்கான கட்டண சேவைகளில் மாற்றம் ஏதும் இல்லை" என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    திருப்பதி

    சமீபத்திய

    இன்று உலக தியேட்டர் தினம் 2023 : மேடை கலையின் முக்கியத்துவத்தை கொண்டாடுவோம் உலகம்
    இயக்குனர் ஷங்கர்- நடிகர் ராம்சரண் படத்தின் டைட்டில் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    இந்தியா

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை

    திருப்பதி

    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் சென்னை
    திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள் ஆந்திரா
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் தமிழ்நாடு
    திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம் ஆந்திரா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023