NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?
    2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?
    இந்தியா

    2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 23, 2023 | 12:15 pm 1 நிமிட வாசிப்பு
    2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?
    2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?

    ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவதாகவும், இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடந்த மே 19-ம் தேதி அறிவித்திருக்கிறது. ஒரு ரூபாய் நோட்டின் வாழ்நாள் நான்கு முதல் ஐந்து வருடங்கள் மட்டுமே. 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு அதன் வாழ்நாள் முடியும் தருவாயில் இருக்கிறது. 2018-19-ம் ஆண்டிலேயே புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்தவிட்டது ரிசர்வ் வங்கி. மேலும், கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பவர்களும் 2000 ரூபாய் நோட்டுக்களையே அச்சடிக்கின்றனர். இது போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. மேலும், தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் 10.8% மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்களாகும்.

    பொருளாதாரத்தில் என்ன மாற்றம் ஏற்படும்: 

    கணக்கில் காட்டப்படாத பணமாகவும், கருப்புப் பணமாக பதுக்கி வைக்கவும் 2000 ரூபாய் நோட்டுக்களே அதிகம் பயன்படுகின்றன. தற்போது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவ்வாறாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும், கணக்கில் காட்டப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை என அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. எனவே, பெரும்பாலான ரூபாய் நோட்டுக்கள் தற்போது வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். இதன் மூலம், வங்கிகளால் புதிய கடன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையின் மூலம் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு ட்ரில்லியன் ரூபாய் மீண்டும் பொதுப் பயன்பாட்டிற்கு வரலாம் என நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    ரிசர்வ் வங்கி

    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம் இந்தியா
    இன்று முதல் வங்கிகளில் '2000 ரூபாய் நோட்டு'க்களை மாற்றும் செயல்முறை துவக்கம்! இந்தியா
    '2000 ரூபாய் நோட்டுக்களாலேயே பணம் செலுத்துகிறார்கள்', ஸோமாட்டோவின் வைரல் ட்விட்டர் பதிவு! ட்விட்டர்
    ரூ.2000 நோட்டுக்களை அரசு பேருந்துகளில் பயணிகள் மாற்றலாம் - தமிழக போக்குவரத்துத்துறை இந்தியா

    இந்தியா

    பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா நாடாளுமன்றம்
    ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு  ஆஸ்திரேலியா
    கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை கர்நாடகா
    பெங்களூரு சுரங்கப்பாதை மரணம்: அனைத்து சுரங்கப்பாதைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு கர்நாடகா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023