NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் மிக மகிழ்ச்சியான மாநிலம் எது தெரியுமா: ஆய்வில் தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் மிக மகிழ்ச்சியான மாநிலம் எது தெரியுமா: ஆய்வில் தகவல் 
    மிசோரத்தின் சமூக அமைப்பு மாநிலத்தின் மகிழ்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்தியாவின் மிக மகிழ்ச்சியான மாநிலம் எது தெரியுமா: ஆய்வில் தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 19, 2023
    12:55 pm

    செய்தி முன்னோட்டம்

    குருகிராமில் உள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் ராஜேஷ் கே பிலானியா நடத்திய ஆய்வின்படி, மிசோரம் நாட்டின் மகிழ்ச்சியான மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 100 சதவீத கல்வியறிவு பெற்ற இரண்டாவது மாநிலம் மிசோரம் ஆகும். கடினமான நேரங்களில் கூட மாணவர்கள் வளர்வதற்கு தேவையான பல வாய்ப்புகளை இந்த மாநிலம் வழங்கியுள்ளது.

    மிசோரத்தின் மகிழ்ச்சி விகிதத்தை மதிப்பிடுவதற்கு நடத்தப்பட்ட ஆய்வு, ஆறு அளவுருக்களை கணக்கில் எடுத்துக் கொண்டது.

    குடும்பம் மற்றும் உறவுகள், வேலை தொடர்பான பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள், மதம், மகிழ்ச்சியின் மீதான COVID-19யின் தாக்கம், உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவை அந்த ஆறு அளவுருக்களாகும்.

    மிசோரத்தின் சமூக அமைப்பு மாநிலத்தின் மகிழ்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    details

    ஆண், பெண் என்ற பாகுபாடு அந்த மாநிலத்தில் இல்லை: ஆய்வு 

    ஒவ்வொரு குழந்தையும் வயது, பாலினம் மற்றும் மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், பெரியவர்களாக மாறுவதற்கு முன்பே சம்பாதிக்கத் தொடங்குவது மிசோரத்தின் மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணமாகும்.

    "எந்தப் பணியும் மிகச் சிறியதாகக் கருதப்படுவதில்லை. இளைஞர்கள் பொதுவாக 16 அல்லது 17 வயதிற்குள் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். இது அங்கு ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், ஆண், பெண் என்ற பாகுபாடு அந்த மாநிலத்தில் இல்லை" என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    "இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கு வளர்ப்புதான் காரணம். இது சாதியில்லாத ஒரு சமூகமாகும். மேலும், குழந்தைகளை படிக்க சொல்லி பெற்றோர் இங்கு அதிக அழுத்தம் கொடுப்பதில்லை." என்று மிசோரமில் உள்ள எபென்-ஏசர் போர்டிங் தனியார் பள்ளியின் ஆசிரியை சகோதரி லால்ரின்மாவி கியாங்டே கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்
    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    இந்தியா

    ஆப்பிளின் 25 ஆண்டுகால பயணம் - இந்தியாவை புகழ்ந்த CEO டிம் குக்!  ஆப்பிள் நிறுவனம்
    நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சர்வதேச நீச்சல் போட்டியில், 5 தங்கப்பதக்கங்கள் வென்றார்; பிரபலங்கள் வாழ்த்து கோலிவுட்
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  டி.ஒய்.சந்திரசூட்
    வாட்ஸ்அப் செயலிழப்பு! சரிசெய்ய இந்திய பயனர்கள் செய்யவேண்டியது என்ன? வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025