NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு?
    கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை கைப்பற்றியது வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல்

    கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 06, 2023
    03:40 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமான விளங்கி வரும் கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

    தற்போது ரூ.400 கோடி வருவாய் ஈட்டி வரும் கோவை பழமுதிர் நிலையமானது லாபகரமான நிறுவனமாகவே இயங்கி வருகிறது.

    இதனை ரூ.800 கோடி மதிப்பீட்டில், 70% பங்குகளை ரூ.550-600 கோடிக்கு கைப்பற்றியிருக்கிறது வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல்.

    இந்த நிறுவனத்தின் மீதம் உள்ள 30% பங்குகள் புரமோட்டர்களிடமே இருக்கும் என்றும், தற்போது இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள செந்தில் நடராஜன் அப்படியே தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் முன்னணி விற்பனையாளராக இருக்கும் இந்த நிறுவனம் தென்னிந்தியாவில் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    வணிகம்

    கோவை பழமுதிர் நிலையம்: 

    கோவை பழமுதிர் நிலையத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநராக உள்ள செந்திலின் தந்தையான நடாராஜன் மற்றும் அவரது சகோதரரால் 1965-ல் கோயம்புத்தூரில் ரூ.300 முதலீட்டில் சிறிய கடையாக தொடங்கப்பட்டது பழமுதிர் நிலையம்.

    எந்த கலப்படமும் இல்லாமல் விற்கப்பட்ட பழச்சாறால் இவர்களது கடையின் பழங்களானது பிரபலமடையத் தொடங்கியது.

    2012-ல் அதிகாரப்பூர்வமாக கோவை பழமுதிர் நிலையம் நிறுவனமாக்கப்பட்டது. 60% பங்குகள் நிறுவனத்துடனும், 40% பங்குகள் பங்குதாரர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

    2022-ல் கிட்டத்தட்ட 25 நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல்ஸ் நிறுவனம். ஆனால், மாறிவரும் பொருளாதார நிலை காரணமாக தங்களுடைய முதலீடுகளைக் குறைத்துக் கொண்டே வந்தது.

    ஆனால், இந்த வருடம் முதல்முறையாக கோவை பழமுதிர் நிலையத்தில் அந்நிறுவனம் பங்குகளை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு
    வணிகம்
    முதலீடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கோவை

    கோவை ஈஷாவில் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோலாகல கொண்டாட்டம் ஈஷா யோகா
    கோவைக்கு வந்த மக்னா காட்டு யானை-நொடி பொழுதில் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் தமிழ்நாடு
    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது மாவட்ட செய்திகள்
    கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழக மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் - சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை  சுகாதாரத் துறை
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழகம்
    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  கோவை
    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி  போராட்டம்

    வணிகம்

    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  வணிக செய்தி
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025