Page Loader
கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு?
கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை கைப்பற்றியது வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல்

கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு?

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 06, 2023
03:40 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமான விளங்கி வரும் கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. தற்போது ரூ.400 கோடி வருவாய் ஈட்டி வரும் கோவை பழமுதிர் நிலையமானது லாபகரமான நிறுவனமாகவே இயங்கி வருகிறது. இதனை ரூ.800 கோடி மதிப்பீட்டில், 70% பங்குகளை ரூ.550-600 கோடிக்கு கைப்பற்றியிருக்கிறது வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல். இந்த நிறுவனத்தின் மீதம் உள்ள 30% பங்குகள் புரமோட்டர்களிடமே இருக்கும் என்றும், தற்போது இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள செந்தில் நடராஜன் அப்படியே தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னணி விற்பனையாளராக இருக்கும் இந்த நிறுவனம் தென்னிந்தியாவில் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்

கோவை பழமுதிர் நிலையம்: 

கோவை பழமுதிர் நிலையத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநராக உள்ள செந்திலின் தந்தையான நடாராஜன் மற்றும் அவரது சகோதரரால் 1965-ல் கோயம்புத்தூரில் ரூ.300 முதலீட்டில் சிறிய கடையாக தொடங்கப்பட்டது பழமுதிர் நிலையம். எந்த கலப்படமும் இல்லாமல் விற்கப்பட்ட பழச்சாறால் இவர்களது கடையின் பழங்களானது பிரபலமடையத் தொடங்கியது. 2012-ல் அதிகாரப்பூர்வமாக கோவை பழமுதிர் நிலையம் நிறுவனமாக்கப்பட்டது. 60% பங்குகள் நிறுவனத்துடனும், 40% பங்குகள் பங்குதாரர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. 2022-ல் கிட்டத்தட்ட 25 நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல்ஸ் நிறுவனம். ஆனால், மாறிவரும் பொருளாதார நிலை காரணமாக தங்களுடைய முதலீடுகளைக் குறைத்துக் கொண்டே வந்தது. ஆனால், இந்த வருடம் முதல்முறையாக கோவை பழமுதிர் நிலையத்தில் அந்நிறுவனம் பங்குகளை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.