மேற்கு வங்காளத்தில் உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்? அனைத்து கமிட்டிகளும் அதிரடி கலைப்பு
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்(TMC) கட்சி வரலாறுகாணாத ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசலையும், அரசியல் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள தங்களின் அனைத்து மட்டத்திலான கட்சி அமைப்புகளையும் மற்றும் முன்னணிப் பிரிவுகளின் கமிட்டிகளையும் உடனடியாகக் கலைப்பதாகத்TMC தலைமை அறிவித்துள்ளது. இது குறித்துத் TMC தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்(X) பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மேற்கு வங்காளத்தில் உள்ள கட்சியின் அனைத்துக் கமிட்டிகளும், அதன் சார்பு அமைப்புகளும் உடனடியாகக் கலைக்கப்படுகின்றன. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் சுயபரிசோதனை, செயல்பாட்டு மறுஆய்வு மற்றும் தகுதி மதிப்பீட்டுப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், முதன்மைக் கட்சியும் அதன் அனைத்துத் துணை அமைப்புகளும் உரிய நேரத்தில் மாற்றி அமைக்கப்பட்டுப் புதிய அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
After careful consideration, it has been decided that all committees of the All India Trinamool Congress in West Bengal, as well as all its frontal organisations, shall stand dissolved with immediate effect.
— All India Trinamool Congress (@AITCofficial) June 3, 2026
The party will undertake a comprehensive exercise of introspection,…
புரட்சி
மம்தா பானர்ஜிக்கு எதிராக 59 எம்.எல்.ஏக்கள் புரட்சி
கமிட்டிகள் கலைக்கப்பட்டதற்கான முக்கியப் பின்னணியாக, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைக்கு எதிராகக் கட்சியின் ஒரு பெரும் பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகப் போர்க்கொடி தூக்கியுள்ளது பார்க்கப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 59 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க சட்டமன்ற வளாகத்திற்குத் திரண்டு வந்து, தங்களைத் தான் உண்மையான முதன்மை எதிர்க்கழுவாக அறிவிக்க வேண்டும் என உரிமை கோரியுள்ளனர். இந்த அதிருப்தியாளர்கள் குழுவில் முன்னாள் அமைச்சர்களான ஜாவேத் அகமது கான், அரூப் ராய், சந்திரநாத் சின்ஹா மற்றும் சபினா யாஸ்மின் போன்ற முக்கிய முகங்களும் இடம்பெற்றுள்ளனர்.
சவால்
உடையும் விளிம்பில் கட்சி: கட்சித்தாவல் தடைச் சட்டச் சவால்
கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்க நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, சட்டமன்ற சபாநாயகர் ரதிந்திர போஸிற்கு அனுப்பப்படும் கடிதத்தில் குறைந்தது 52 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும். அண்மையில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக சந்தீபன் சஹா மற்றும் ரிதப்ரதா பானர்ஜி ஆகிய இரு எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்டதை அடுத்து, திரிணாமுல் காங்கிரஸின் ஒட்டுமொத்த பலம் 78 ஆகக் குறைந்தது. இந்தச் சூழலில், தற்போது 59 எம்.எல்.ஏக்கள் மம்தா பானர்ஜிக்கு எதிராகத் தனி அணியாக திரண்டுள்ளதால், அவர்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் புதிய அணியை உருவாக்கத் தகுதி பெற்றுள்ளனர்.