அடுத்த செய்திக் கட்டுரை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
எழுதியவர்
Sindhuja SM
Mar 28, 2023
01:40 pm
செய்தி முன்னோட்டம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால், மார்ச் 28ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 29- ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யலாம்.
ராணிப்பேட்டை மற்றும் தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நேற்று மழை பதிவாகியது.
ட்விட்டர் அஞ்சல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பதிவான இடங்கள்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 28, 2023