LOADING...
வானிலை அறிக்கை: பிப்ரவரி 27- மார்ச் 3
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை

வானிலை அறிக்கை: பிப்ரவரி 27- மார்ச் 3

எழுதியவர் Sindhuja SM
Feb 27, 2023
02:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் இன்று(பிப் 27) வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி மற்றும் மார்ச் 1ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ஆம் தேதியில் இருந்து மார்ச் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

ட்விட்டர் அஞ்சல்

கடந்த 24 மணிநேரத்தில் அதிக வெப்பநிலை பதிவான இடங்களின் விவரம்