NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு
    விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான தொடர்-போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022
    07:52 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.

    அதன்படி, நாகப்பட்டு, தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி, நெல்வாய் ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமன்றி குடியிருப்புகளும் அகற்றப்படவுள்ளது.

    இதனையடுத்து, தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான தங்களது விளைநிலங்களும் பாதிப்படைவதால் பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.

    கிராம சபை கூட்டங்களிலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

    மேலும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பல பேரணிகளை மேற்கொண்ட இப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    சர்வேதேச டெண்டர் அறிவிப்பு

    தமிழக பொருளாதாரத்தை ட்ரில்லியன் டாலராக உயர்த்த விமான நிலையம் கட்டாயம் தேவை-தமிழக அரசு அறிக்கை

    இந்நிலையில் 150வது நாளாக தொடரும் போராட்டத்தில் இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி, தலையில் துணி போட்டுக்கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியப்படி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

    இதற்கிடையே, முன்னதாக கிராம மக்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்திய தமிழக அரசு, "தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030ம் ஆண்டுக்குள் உயர்த்த வேண்டுமானால் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயம்" என அறிக்கை வெளியிட்டதோடு,

    தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி கழகமானது, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான சர்வேதேச டெண்டரை அறிவித்துள்ளது குறிப்பிடவேண்டியவை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஸ்டாலின்

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    தமிழ்நாடு

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை! இந்தியா
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் தென்காசி
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025