NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு
    இந்தியா

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு
    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022, 07:52 pm 1 நிமிட வாசிப்பு
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு
    விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான தொடர்-போராட்டம்

    சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதன்படி, நாகப்பட்டு, தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி, நெல்வாய் ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமன்றி குடியிருப்புகளும் அகற்றப்படவுள்ளது. இதனையடுத்து, தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான தங்களது விளைநிலங்களும் பாதிப்படைவதால் பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். கிராம சபை கூட்டங்களிலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். மேலும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பல பேரணிகளை மேற்கொண்ட இப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    தமிழக பொருளாதாரத்தை ட்ரில்லியன் டாலராக உயர்த்த விமான நிலையம் கட்டாயம் தேவை-தமிழக அரசு அறிக்கை

    இந்நிலையில் 150வது நாளாக தொடரும் போராட்டத்தில் இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி, தலையில் துணி போட்டுக்கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியப்படி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே, முன்னதாக கிராம மக்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்திய தமிழக அரசு, "தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030ம் ஆண்டுக்குள் உயர்த்த வேண்டுமானால் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயம்" என அறிக்கை வெளியிட்டதோடு, தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி கழகமானது, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான சர்வேதேச டெண்டரை அறிவித்துள்ளது குறிப்பிடவேண்டியவை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஸ்டாலின்
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு
    விமான சேவைகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    ஸ்டாலின்

    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் கேரளா
    ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் ஆஸ்கார் விருது
    தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு
    ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா தமிழ்நாடு

    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் தமிழ்நாடு
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது தமிழ்நாடு
    உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளம்

    தமிழ்நாடு

    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ஆஸ்திரேலியா
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு இந்தியா

    விமான சேவைகள்

    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம் புதுச்சேரி
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? தொழில்நுட்பம்
    ஏரோ இந்தியா 2023; விமான கண்காட்சியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! விமானம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023