NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
    தேசியப் பட்டியலின ஆணையத்தினர் வேங்கைவயலுக்கு நேரில் வருவதாக தெரிவித்துள்ளனர்: இளமுருகு முத்து

    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2023
    01:19 pm

    செய்தி முன்னோட்டம்

    வேங்கை வயல் பிரச்சனை குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும்மென புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு தேசியப் பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த நோட்டீஸ் தற்போது மாவட்ட நிர்வாகத்திடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, பிப்ரவரி 7ஆம் தேதியன்று இதே ஆணையத்திடம் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "மார்ச் 4 ஆம் தேதி தேசியப் பட்டியலின ஆணையத்தினர் வேங்கைவயலுக்கு நேரில் வருவதாக தெரிவித்துள்ளனர்" என்று இளமுருகு கூறி இருந்தார்.

    புதுக்கோட்டை

    வேங்கை வயலில் நடந்த பிரச்சனைகள்

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

    இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனையடுத்து, எழுந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை ஆட்சியர் இதை நேரில் சென்று விசாரித்தார்.

    அப்போது, அந்த பகுதி மக்கள் இன்னும் தீண்டாமை செயல்களை பின்பற்றுவது தெரியவந்தது.

    இதை ஒழிப்பதற்கு தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

    எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த வழக்கு காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றபப்ட்டது.

    மாற்றப்பட்ட இந்த வழக்கில் முன்னேற்றம் இருப்பதாக சிபிசிஐடி சமீபத்தில் கூறி இருந்தது.

    ஆனால், அதன் பிறகு சிபிசிஐடியிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேங்கை வயல்
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    வேங்கை வயல்

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் தமிழ்நாடு
    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர் ஸ்டாலின்

    தமிழ்நாடு

    மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி - 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை மதுரை
    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு இந்தியா
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு மாவட்ட செய்திகள்
    துணி துவைத்ததற்காக ராணுவ வீரர் ஒருவரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர் திமுக

    இந்தியா

    ஒரு நபர் நாளொன்று சராசரியாக எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகிறார்? ஆய்வறிக்கை தொழில்நுட்பம்
    இந்தியாவில் ட்விட்டர் நிறுவனங்கள் மூடல்! காரணம் என்ன? ட்விட்டர்
    தங்கம் விலை சவரனுக்கு ரூ,720 சரிவு - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    முடிந்தது பிபிசி ரெய்டு: என்ன சொல்கிறது பிபிசி இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025