NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது
    இந்தியா

    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது

    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது
    எழுதியவர் Sindhuja SM
    Jan 13, 2023, 06:18 pm 0 நிமிட வாசிப்பு
    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது
    பாதுகாப்பை மீறி ஆளுநர் மாளிகைக்குள் செல்ல முயற்சித்ததால் தொல். திருமாவளவன் கைது

    தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிடப்படும் என்று விசிக கட்சி சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையின் முன்பு இந்த போராட்டம் நடத்தப்பட்டது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் விடுதலை சிறுத்தை, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மூன்று மணி நேரம் அமைதியாக சென்று கொண்டிருந்த இந்த போராட்டம், தொல். திருமாவளவன் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைய முயற்சித்தபோது பரபரப்படைந்தது. பாதுகாப்பை மீறி ஆளுநர் மாளிகைக்குள் செல்ல முயற்சித்ததால் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

    என்ன நடந்தது?

    சில நாட்களுக்கு முன்,சட்டமன்றத்தில் உரையை வாசிக்கும் போது சில வார்த்தைகளை ஆளுநர் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாக கூறப்பட்டது. இதை எதிர்த்து, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் ஜனவரி 13ஆம் தேதி நடக்கும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் அறிவித்தார். இந்த போராட்டத்தில் பேசும் போது, "கேரளா மற்றும் மேற்குவங்கம் போல் தமிழ்நாட்டிலும் ஆளுநர் இல்லாமல் சட்டமன்ற கூட்டம் நடைபெற வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக ஆதரவாளர்களை ஆளுநராக நியமிக்க கூடாது." என்று தொல். திருமாவளவன் கூறினார். மேலும், அவர் "ஆளுநர் வெளியேறும் வரை போராட்டம் நடத்தப்படும்" என்றும் அறிவித்தார். இதற்கிடையில், அவர் தடையை மீறி ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சித்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    போராட்டம்

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    தமிழ்நாடு

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    போராட்டம்

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் விழுப்புரம்
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது தமிழ்நாடு
    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023