NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது
    பாதுகாப்பை மீறி ஆளுநர் மாளிகைக்குள் செல்ல முயற்சித்ததால் தொல். திருமாவளவன் கைது

    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Jan 13, 2023
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிடப்படும் என்று விசிக கட்சி சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, இன்று சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையின் முன்பு இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதில் விடுதலை சிறுத்தை, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    மூன்று மணி நேரம் அமைதியாக சென்று கொண்டிருந்த இந்த போராட்டம், தொல். திருமாவளவன் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைய முயற்சித்தபோது பரபரப்படைந்தது.

    பாதுகாப்பை மீறி ஆளுநர் மாளிகைக்குள் செல்ல முயற்சித்ததால் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

    போராட்டம்

    என்ன நடந்தது?

    சில நாட்களுக்கு முன்,சட்டமன்றத்தில் உரையை வாசிக்கும் போது சில வார்த்தைகளை ஆளுநர் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாக கூறப்பட்டது.

    இதை எதிர்த்து, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் ஜனவரி 13ஆம் தேதி நடக்கும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் அறிவித்தார்.

    இந்த போராட்டத்தில் பேசும் போது, "கேரளா மற்றும் மேற்குவங்கம் போல் தமிழ்நாட்டிலும் ஆளுநர் இல்லாமல் சட்டமன்ற கூட்டம் நடைபெற வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக ஆதரவாளர்களை ஆளுநராக நியமிக்க கூடாது." என்று தொல். திருமாவளவன் கூறினார்.

    மேலும், அவர் "ஆளுநர் வெளியேறும் வரை போராட்டம் நடத்தப்படும்" என்றும் அறிவித்தார்.

    இதற்கிடையில், அவர் தடையை மீறி ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சித்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    போராட்டம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி இந்தியா
    பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல் பொங்கல் பரிசு
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    வேலுநாச்சியாருக்கு புகழாரம்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்! மோடி

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு தமிழ்நாடு
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025