NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-1
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-1
    இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் வாடிலால்

    இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-1

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 06, 2023
    08:42 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கி வரும் வாடிலால் வணிக நிறுவனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    இல்லையா? தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரிந்த ஐஸ்கிரீம் விற்பனை நிறுவனமாக அறியப்படுவது அருண் ஐஸ்கிரீம் நிறுவனம் தான்.

    அருண் ஐஸ்கிரீம் நிறுவனமானது, 1970-ல் தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம்.

    ஆனால், அதற்கு முன்னதாக 1900-களிலேயே, அகமதாபாத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம், வாடிலால்.

    முதலில் ஒரு சிறிய சோடா விற்கும் கடையாக மட்டுமே துவங்கப்பட்டு, பின்னர் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யும் நிறுவனமாக உருவெடுத்தது வாடிலால்.

    1907-ல் அகமதாபாத்தில் முதல் சோடா விற்பனைக் கடையைத் தொடங்கினார், வாடிலால் காந்தி. சோடா விற்பனை பெரியளவில் இல்லை. அதன் விற்பனையை உயர்த்த சோடாவை ஐஸ்கிரீமுடன் சேர்த்து விற்பனை செய்யத் துவங்கினார்.

    வணிகம்

    அகமதாபாத்தில் பிரபலமான வாடிலால்:

    சோடாவுடன் ஐஸ்கிரீம் என்பது அன்றைய நாளில் மிகவும் புதுமையாக இருக்கவே, மக்கள் பலரும் வாடிலால் கடையைத் தேடி வந்து சோடா ஐஸ்கிரீமை வாங்கி சுவைத்திருக்கிறார்கள்.

    முதலில் 'கொத்தி' என்ற கையால் ஐஸ்கிரீம் செய்யும் முறையைப் பயன்படுத்தியே ஐஸ்கிரீமைத் தயாரித்து வந்திருக்கிறார் வாடிலால் காந்தி.

    ஐஸ்கிரீம் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கவே, 1926-ல் அகமதாபாத்தில் முதல் ஐஸ்கிரீம் கடையைத் துவக்கியிருக்கிறார் வாடிலால் காந்தியின் மகன், ரன்சோட்லால் காந்தி.

    அதனைத் தொடர்ந்து ஒரு கடை இரண்டானது, இரண்டு நான்கானது. 1960-களில் அகமதாபாத்தில் மட்டும் பத்து கடைகளைக் கொண்டிருந்திருக்கிறது வாடிலால். பின்னர் வாடிலாலின் பேரன் வியாபாராத்தை விரிவுபடுத்தவும், அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் ஆயத்தமாகியிருக்கிறார்.

    Instagram அஞ்சல்

    Instagram Post

    Instagram post

    A post shared by vadilalicecreams on July 5, 2023 at 3:27 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    வணிகம்

    சிறிய சிற்றுண்டிக் கடையாகத் திறக்கப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பை எட்டிய ஹால்டிராம்: பகுதி-2 இந்தியா
    இந்தியாவில் ரூ.10,000 கோடியாக உயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி ஆப்பிள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19 தங்கம் வெள்ளி விலை
    'ட்ரெயின்மேன்' தளத்தை கையகப்படுத்தியதன் மூலம் IRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி? இந்திய ரயில்வே

    இந்தியா

    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் மருத்துவம்
    இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக் காலம் நீட்டிப்பு  உச்ச நீதிமன்றம்
    குளோபல் NCAP-க்கு நிகராக அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவிருக்கும் இந்தியாவிற்கான பாரத் NCAP ஆட்டோமொபைல்
    நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025