NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம்
    மீட்புப்பணிகளை மேற்பார்வையிடும் உத்தரகாண்ட் முதல்வர்

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 25, 2023
    09:16 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்டில் உள்ள சில்க்யாரா-பர்கோட் இடையே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 41 தொழிலாளர்கள் 13-நாட்களாக சிக்கி தவித்து வருகின்றனர்.

    அவர்களை மீட்கும் பணியில் வரிசையாக சிக்கல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், பணி இறுதி கட்டத்தை நெருங்கியதாக இரு தினங்களுக்கு முன்னர் கூறப்பட்டது.

    எனினும், மாற்று பாதை அமைக்கும் முயற்சியும் இயந்திர கோளாறால் தொடர்ச்சியாக தடைப்படவே, மீதமுள்ள பகுதிகள் கைகளால் துளையிட திட்டமிடப்பட்டுள்ளது என உத்தராகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

    41 தொழிலாளர்களை மீட்கும் நோக்கில், சுரங்கத்தின் நுழைவுப் பகுதி வழியாக, இடிபாடுகளின் ஊடாக 800 மி.மீ. விட்டத்துக்கு துளையிடும் பணி நடைபெற்று வந்தது.

    இந்த பணிகளை மேற்பார்வையிட உத்தரகாண்ட் முதல்வர் அங்கேயே முகாமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    card 2

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் 

    இந்த மாற்று பாதையை துளையிட, இந்தியாவிலிருக்கும் இயந்திரங்கள் பயனளிக்காத நிலையில், பாறைகளை வேகமாக குடையும் அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    46 மீட்டர் அளவுக்கு குடையப்பட்டு, இரும்பு பைப்புகள் நுழைக்கப்பட்டு, அதன்மூலம் தொழிலாளர்களை ஸ்ட்ரெச்சரில் வெளியே அழைத்து வர திட்டமிடப்பட்டது.

    இன்னும் 10 சதவீத பணிகளே எஞ்சியிருந்த நிலையில், நேற்றிரவு திடீரென அந்த அகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து இயந்திரம் பழுதடைந்து, அதன் பாகங்கள் உடைந்தன.

    அதனால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. உடைபட்ட பாகங்களும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது கூடுதல் விஷயம்.

    card 3

    செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி 

    இந்த மீட்பு நடவடிக்கைகளை பற்றி நிபுணர்களிடம் கலந்தாலோசித்த முதல்வர் தாமி, பின்னர் செய்தியாளகர்ளிடம் பேசினார்.

    "மீட்புப் பணி எவ்வளவு சிரமத்துக்கும் சவால்களுக்கும் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள். மிக நெருக்கமாக சென்ற நிலையில், இயந்திரம் பழுதடைந்து உள்ளே சிக்கிக் கொண்டுள்ளது. நாளை காலைக்குள் இயந்திரம் வெளியே எடுக்கப்பட்டு விடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்".

    "அதன் பிறகு, மீதமுள்ள பகுதியை கைகளால் குடைய திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலித்து நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆகர் இயந்திரத்தை வெட்டி எடுக்க ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா இயந்திரத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    உத்தர்காசி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    உத்தர்காசி

    உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்? உத்தரகாண்ட்
    சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்? உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025