NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை திறப்பு: இதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை திறப்பு: இதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?
    புதிய நீதி தேவதை சிலை

    உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை திறப்பு: இதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 17, 2024
    08:40 am

    செய்தி முன்னோட்டம்

    "சட்டம் குருடு அல்ல" என்ற வாசகத்துடன், புதிய நீதிதேவதை சிலை உச்ச நீதிமன்ற நூலகத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று இதனை திறந்து வைத்தார்.

    பொதுவாக காட்சிப்படுத்தப்பட்ட பாரம்பரிய நீதி தேவதை போல அல்லாமல், இந்த புதிய சிலையில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இத்தனை ஆண்டுகாலம் உருவாக்கப்படுத்தப்பட்ட நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் மூடியும், இடது கையில் தராசு மற்றும் வலது கையில் வாளும் இருக்கும்.

    இது உயர்ந்தவன் மற்றும் தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை மறுக்க, நீதி வழங்குவதற்கு சரியான அளவுகோல்களை பயன்படுத்த வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

    அநீதியை எதிர்கொள்வதற்கான நீதிதேவதியின் அடையாளமாக இது பார்க்கப்பட்டது. புதிய சிலையில் உள்ள மாற்றங்கள் இதோ:

    புதிய நீதி தேவதை

    புதிய சிலையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் 

    கறுப்பு துணி அகற்றம்: புதிய நீதிதேவதை சிலை, "சட்டம் குருடு அல்ல" என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. இது சட்டத்தின் முன் சமத்துவத்தை வலியுறுத்துகிறது; எனவே, சட்டம் ஒருபோதும் குருடாகாது, அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதைக் குறிக்கிறது.

    அரசியல் சாசன புத்தகம்: இடது கையில் வாளுக்கு பதிலாக, அரசியல் சாசன புத்தகம் பிடித்துள்ளது நீதி தேவதை. இது நாட்டின் நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டங்களின்படி நீதி வழங்குகின்றன என்பதைக் குறிக்கிறது.

    நியாய தராசு: சமநிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்தால், இரு தரப்பு உண்மைகள் மற்றும் வாதங்கள் முடிவுக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றங்கள் எடையிடும் என்பதை வலியுறுத்துகிறது; இதை பிரதிநிதித்துவபடுத்த வலது கையில் நீதியின் தராசு உள்ளது.

    பொது சிவில் சட்டம்

    பொது சிவில் சட்டத்தின் அடையாளம்

    மத்திய அரசு மீண்டும் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சியில் வருமானால், அனைத்து பிரிவு மக்களுக்கும் ஏற்ற வகையில், நாடு தழுவிய பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் முன்னோட்டமாக, பா.ஜ. கட்சியால் ஆளப்படும் உத்தரகண்ட் மாநிலத்தில், பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான மாதிரி, "ஒற்றுமை மூலம் சமத்துவத்தை வளர்ப்போம்" என்ற வாசகத்துடன் உள்ள சிலை, தற்போது உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதிதேவதை சிலை திறக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    உச்ச நீதிமன்றம்

    கோடை விடுமுறையின் போது, 1,170 வழக்குகளை தீர்த்து வைத்தது உச்ச நீதிமன்றம் டி.ஒய்.சந்திரசூட்
    பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கினால் வேலைவாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    சினிமாவில் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவத்திற்கான வழிகாட்டுதல்: உச்ச நீதிமன்றம் வெளியீடு சினிமா
    விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025