NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி 

    மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2024
    09:35 am

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் நள்ளிரவு முதல் அதிகாலை 2.15 மணி வரை நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

    ஆயுதமேந்திய குழுக்கள் பணியாளர்கள் மீது குண்டுகளை வீசியது. அந்த குண்டுகள் பாதுகாப்புப் படைகளின் புறக்காவல் நிலையத்திற்குள் வெடித்தது.

    உயிரிழந்தவர்கள் நரஞ்சேனா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஆர்பிஎஃப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    "பாளையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் மலை உச்சியில் இருந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இது நள்ளிரவு 12.30 மணியளவில் தொடங்கி அதிகாலை 2.15 மணி வரை தொடர்ந்தது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 

    உயிரிழந்தவர்களின் விவரங்கள் 

    தீவிரவாதிகள் வெடிகுண்டுகளையும் வீசினர். அதில் ஒன்று சிஆர்பிஎஃப் 128 பட்டாலியனின் அவுட்போஸ்ட்டில் வெடித்தது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இறந்தவர்கள் சிஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் என் சர்க்கார் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் அருப் சைனி என அடையாளம் காணப்பட்டனர்.

    இன்ஸ்பெக்டர் ஜாதவ் தாஸ் மற்றும் கான்ஸ்டபிள் அஃப்தாப் உசேன் ஆகிய இருவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

    IRBn(இந்திய ரிசர்வ் பட்டாலியன்) முகாமுக்கு பாதுகாப்பு வழங்க CRPF வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க பெரிய தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    மணிப்பூர்

    நாடாளுமன்ற முடக்கம் - மணிப்பூர் விவகாரத்தில் பின்வாங்கும் எதிர்கட்சியினர்? நாடாளுமன்றம்
    மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சூறையாடப்பட்டன கலவரம்
    மணிப்பூர் வன்முறை: கூடுதலாக 1,400 பாதுகாப்புப்படை வீரர்களை அனுப்பிய மத்திய அரசு  உள்துறை
    மணிப்பூர் விவகாரம்: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உருவாக்கியது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    இன்று முழு சூரிய கிரகணம்: இந்தாண்டின் முதல் சூரிய கிரஹணத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி? சூரிய கிரகணம்
    'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள்  பாகிஸ்தான்
    பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேல் நாட்டவர்  பிரதமர் மோடி
    'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025