NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீரை விநியோகித்த இருவர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீரை விநியோகித்த இருவர் கைது
    தாஜ்மஹால்

    தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீரை விநியோகித்த இருவர் கைது

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 03, 2024
    08:33 pm

    செய்தி முன்னோட்டம்

    அகில பாரத இந்து மகாசபாவுடன் தொடர்புடையதாகக் கூறிக்கொண்ட இருவர், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீர் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த வினேஷ் மற்றும் ஷியாம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தாஜ்கஞ்ச் போலீஸ் காவலில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள், தாஜ்மஹாலை 'தேஜோ மஹாலே' என்ற சிவன் கோயிலாகக் கருதி பிளாஸ்டிக் பாட்டில்களில் புனித நீரை வழங்குவதாகக் கூறியதாகத் தெரிகிறது.

    இது தொடர்பாக வைரலான ஒரு வீடியோவில், ஒரு சுற்றுலா பயணியாக டிக்கெட் வாங்கிய பிறகு நினைவுச்சின்னத்தின் வளாகத்திற்குள் நுழைந்த குற்றவாளிகளில் ஒருவர், மூடிய படிக்கட்டில் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றுவதைக் காணலாம்.

    சிஐஎஸ்எஃப் புகார்

    இருவரையும் விடுவிக்க அகில பாரத இந்து மகாசபா வலியுறுத்தல்

    தாஜ்மஹால் ஒரு நினைவுச்சின்னம் அல்ல, அது ஒரு சிவன் கோவில் என்றும், ஓம் என்ற ஸ்டிக்கரில் புனித நீர் ஊற்றப்பட்டது என்றும் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குறித்தும் சிஐஎஸ்எஃப் எழுத்துப்பூர்வமாக தாஜ்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் செய்தது.

    மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படையான சிஐஎஸ்எஃப், புராதன சின்னமான தாஜ்மஹாலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர், சிவபெருமான் தனது கனவில் வந்து இதை சொன்னதாக கூறியதால்தான், அவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.

    இந்நிலையில், அகில பாரத இந்து மகாசபாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜாட், இருவரையும் காவல்துறை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உத்தரப்பிரதேசம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    Zomato பயனர்களுக்கான நற்செய்தி, இப்போது டெலிவரி ஹிஸ்டரியிலிருந்து உங்கள் ஆர்டர்களை டெலீட் செய்யலாம் சோமாட்டோ
    டெல்லி, நொய்டாவில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லி
    இடைத்தேர்தல் முடிவுகள்: 13 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இடைத்தேர்தல்
    விவசாயியை துப்பாக்கியை வைத்து மிரட்டிய ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்கு  மகாராஷ்டிரா

    உத்தரப்பிரதேசம்

    அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு பெயர் வைக்கப்பட்டது அயோத்தி
    Honey Trap-ல் சிக்கி ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி பாகிஸ்தான்
    உத்தர பிரதேசத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் பலி இந்தியா
    கான்பூரில் 4,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகம் அதானி

    காவல்துறை

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    அவதூறு சர்ச்சை: ஏ.வி.ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார் அதிமுக
    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு அமெரிக்கா
    கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு ஜார்கண்ட்

    காவல்துறை

    நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்  டெல்லி
    மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மயிலாடுதுறை
    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை பெங்களூருக்கு அழைத்து சென்றது காவல்துறை  பெங்களூர்
    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் நயினார் நாகேந்திரன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025