திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. படுகாயம் அடைந்த அவர் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எப்படி காயமடைந்தார் என்பதை அக்கட்சி வெளியிடவில்லை. ஆனால் இந்தியா டுடே டிவி தெரிவித்ததன்படி, மேற்கு வங்க முதல்வர், அவரது வீட்டில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டரை சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் அவசரமாக தரையிறக்க நேரிட்டதால் காலில் காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது முழங்கால் மூட்டு மற்றும் இடது இடுப்பு மூட்டு ஆகியவற்றில் தசைநார் காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
மம்தா குணம்பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து
நெற்றியில் காயத்துடன் மருத்துவமனையில் உள்ள மம்தா பானர்ஜியின் படங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்தவுடன், அரசியல் தலைவர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்கள். காங்கிரஸ் எம்பி சசி தரூர், இந்தப் படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். மேற்கு வங்க முதல்வர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்தார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அவருக்கு இதேபோன்ற வாழ்த்துகளை தெரிவித்து,"உங்கள் விரைவில் குணமடைய பிரார்த்தியுங்கள் தீதி. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என்று எழுதினார்.