NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி 

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 03, 2024
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய என்கவுன்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு இயக்க கமாண்டர் ரியாஸ் ஷெத்ரி மற்றும் அவரது கூட்டாளி ராயீஸ் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    ரியாஸ் 2015 ஆம் ஆண்டு முதல் செயலில் இருந்தவர் ஆவர்.

    கையெறி குண்டு தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத ஆட்சேர்ப்பு உட்பட 20 க்கும் மேற்பட்ட பயங்கரவாத சம்பவங்களில் கொல்லப்பட்ட இருவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது.

    மேலே கூறிய குற்றங்கள் A+ வகை குற்றங்கள் என்பதால் அவர்களது தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஜம்மு-காஷ்மீர் 

    பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீடு தீப்பிடித்து எரிந்தது

    அந்த 2 பயங்கரவாதிகளும் தாங்கள் மறைவிடமாகப் பயன்படுத்திய வீட்டில் சிக்கிக் கொண்டதாகவும், துப்பாக்கிச் சண்டையின் போது அது தீப்பிடித்ததாகவும் அதிகாரிகள் இன்று காலை தெரிவித்திருந்தனர்.

    புல்வாமா மாவட்டத்தின் நெஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இன்று காலை சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

    பாதுகாப்பு படைகளின் தேடுதல் குழுவினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது.

    மே 7ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளைக் கொன்றனர்.

    துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் லஷ்கர் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின்(டிஆர்எஃப்) தீவிர செயல்பாட்டாளராக இருந்த பாசித் தார் கொல்லப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜம்மு காஷ்மீர்

    பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்  ஐநா சபை
    ஜம்மு காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர் ஆகிறாரா குலாம் நபி ஆசாத்?  இந்தியா
    ஐந்தாண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி- முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு முதல் அமைச்சர்
    காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா அமித்ஷா

    பயங்கரவாதம்

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார் இஸ்ரேல்
    'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு இஸ்ரேல்
    'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை இஸ்ரேல்
    'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா

    இந்தியா

    எம்பி ஸ்வாதி மாலிவாலின் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி  டெல்லி
    சுவாதி மாலிவால் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து பிபவ் குமார் கைது  டெல்லி
    மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி உத்தரப்பிரதேசம்
    இந்திய தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் டீசல் விற்பனை சரிந்தது  பெட்ரோல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025