NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
    ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்வு

    ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 25, 2025
    12:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏப்ரல் 1 முதல், தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் வருடாந்திர திருத்தத்தின் ஒரு பகுதியாக கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படும் டோல் பிளாசாக்களில் வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம், ஆத்தூர், சூரப்பட்டு மற்றும் பட்டரை பெரும்புதூர் ஆகியவை அடங்கும்.

    வாகன வகையைப் பொறுத்து கட்டணம் ₹5 முதல் ₹75 வரை உயரும். மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கான இரண்டாம் கட்ட கட்டண திருத்தங்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, சாலை பராமரிப்பு மோசமாக இருந்தபோதிலும், சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து கட்டணம் அதிகரிப்பது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ் கவலை தெரிவித்துள்ளார்.

    காலாவதி 

    காலாவதியான சுங்கச்சாவடிகள்

    சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ள போதிலும் சாலைகளை மோசமாகப் பராமரிப்பதே சாலை விபத்துகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் யுவராஜ் சுட்டிக்காட்டினார்.

    இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசின் மீது தமிழக அரசு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    கூடுதலாக, ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டண உயர்வு சரக்குக் கட்டணங்களை கணிசமாக அதிகரிக்கும் என்றும், போக்குவரத்துச் செலவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

    இதற்கிடையே, மாநிலத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகள் ஏற்கனவே செயல்பாட்டு காலத்தை மீறிவிட்டன என்றும் அவை மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் யுவராஜ் கூறியுள்ளார்.

    மேலும், காலாவதியான இந்த சுங்கச்சாவடிகளை மூடுமாறு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுங்கச்சாவடி
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    சுங்கச்சாவடி

    நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தினை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்கு பிறகு செயலிழக்கும்: NHAI  மத்திய அரசு
    விரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அறிமுகம்; இதுபற்றி மேலும் சில தகவல்கள் இந்தியா
    மதுரை மக்களுக்கு வெளியான நற்செய்தி; கப்பலூர் டோல் கேட்டில் சுங்க கட்டணத்தில் எதிர்பார்த்த மாற்றம் அமல்  மதுரை

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை எச்சரிக்கை
    வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ் சிறப்பு பேருந்துகள்
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி; நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர், துணை முதல்வர் துரைமுருகன்
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழகம்

    திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்
    தமிழகத்தில் தொடரும் இன்ப்ளுயன்ஸா தொற்று; தடுப்பூசியை கட்டாயமாக்கிய தமிழக சுகாதாரத்துறை தமிழக அரசு
    "அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்": முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில் பள்ளி மாணவர்கள்
    2 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க போகிறார் தவெக தலைவர் விஜய் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025