NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி? - எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார வாரியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி? - எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார வாரியம்
    மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வருகிறதா? உஷாராக இருக்குமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தல்

    மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி? - எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார வாரியம்

    எழுதியவர் Nivetha P
    Oct 31, 2023
    02:42 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் தொழில்நுட்பம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஈடான ஆபத்துகளும் அதிகரித்து கொண்டே போகிறது.

    அதில் ஒன்றாக தற்போது, நமது மொபைல் போனிற்கு வரும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை க்ளிக் செய்தால், நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தினை எடுக்கும் மோசடி அதிகரித்து வருகிறது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

    இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தியினை வெளியிட்டுள்ளது.

    அதில், 'உங்கள் மொபைல் எண்ணிற்கு மின் கட்டணம் கட்டவில்லை என்று ஓர் குறுஞ்செய்தி வரும். அதிலுள்ள லிங்கை க்ளிக் செய்தால், உங்கள் கணக்கில் உள்ள பணம் பறிபோக வாய்ப்புள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    எச்சரிக்கை 

    குறுஞ்செய்தி அனுப்பிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் கூடாது - மின்சாரத்துறை

    மேலும் அதில், 'அவ்வாறு குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் அடையவேண்டாம். உங்கள் மின்சார பில் நிலைப்பாட்டினை சரிபார்க்கவும். குறுஞ்செய்தி அனுப்பிய எண்ணிற்கு தொடர்பு கொள்ள கூடாது' என்று கூறப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து, இதுபோல் குறுஞ்செய்தி வந்தவுடன், 1930 என்னும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதே போல், இது போன்ற மோசடி குறுஞ்செய்திகள் குறித்து, அவரவர் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கும் கூறி அவர்களை ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்துமாறும் அந்த செய்தி குறிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அலெர்ட் பதிவு 

    தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை...!#TNEB | #EBBill | #TNGovt | #Awareness pic.twitter.com/ZhyBIgMyeB

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    எச்சரிக்கை
    மொபைல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தொழில்நுட்பம்

    ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை, ரூ.1 கோடி சம்பளம் கூகுள்
    உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள் அறிவியல்
    வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ் செயற்கை நுண்ணறிவு
    புதிய ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தவிருக்கும் நத்திங்கின் துணை பிராண்டான CMF கேட்ஜட்ஸ்

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள் இந்தியா
    AI தொழில்நுட்பத்துடன் கூடிய தேடுபொறி வசதியை இந்தியாவிற்கும் விரிவுபடுத்திய கூகுள் கூகுள்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Google-க்கு வயது 25, பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை! கூகுள்

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு

    மொபைல்

    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?  ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025