NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டம் - வங்கி கணக்கு, மொபைல் போன் கட்டாயம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டம் - வங்கி கணக்கு, மொபைல் போன் கட்டாயம்!
    தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டம் - வீடுகளுக்கே சென்று விண்ணப்பப்படிவம் விநியோகம்

    தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டம் - வங்கி கணக்கு, மொபைல் போன் கட்டாயம்!

    எழுதியவர் Nivetha P
    Jul 12, 2023
    01:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல் குடும்பத்தலைவிகளுக்கு'கலைஞர் மகளிர் உரிமை தொகை'திட்டத்தின்படி, மாதம் ரூ.1,000வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் வரும் 24ம்தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 36ஆயிரம் நியாயவிலை கடைகளில் விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளது என்றும்,

    இதற்கான விண்ணப்பப்படிவத்தினை ரேஷன்கடை பணியாளர்கள் வீடுகளுக்கேச்சென்று விநியோகிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது தமிழக அரசு சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை நிர்வாகம் அனுமதியளித்து அரசாணை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    அதில், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 21வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

    விண்ணப்படிவம் சமர்ப்பித்து பதிவினை மேற்கொள்ளும் நிலையில், கடவுச்சொல் மொபைல் நம்பருக்கு வரும் என்பதால் மொபைல் போனினை பெண்கள் கையில் கட்டாயம் கொண்டு செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பணம் 

    ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம்கள் இயங்க உத்தரவு 

    அதே போல் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கையில் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின்சார கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட அசலினை கையோடு கொண்டுவருமாறு கூறப்பட்டுள்ளது.

    மேலும் விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளும் முகாம்கள் காலை 9.30 மணிமுதல் 1 மணிவரையும், 2 மணிமுதல் மாலை 5.30 வரையும் செயல்பட வேண்டும்.

    அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த முகாம்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒரு குடும்பத்திற்கு 2.50 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தாலோ, தங்கள் சொந்த உபயோகத்திற்காக கனரக வாகனங்கள், கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருந்தாலோ அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    வேறுசில காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மீண்டும் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    தமிழக அரசு

    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  தமிழ்நாடு
    பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு
    ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு தமிழ்நாடு
    தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு  சுகாதாரத் துறை

    மு.க ஸ்டாலின்

    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா
    கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று முதல் துவக்கம்  கருணாநிதி
    இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  இளையராஜா
    சேலம் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 3 பேர் உடல் சிதறி பலி  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025