NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை 
    சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை 
    இந்தியா

    சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை 

    எழுதியவர் Nivetha P
    May 12, 2023 | 04:26 pm 1 நிமிட வாசிப்பு
    சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை 
    சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை

    தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகளான ஜெயகல்யாணி சென்னை ஓட்டேரியை சேர்ந்த சதீஷை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இதில் அவருடைய தந்தையான சேகர்பாபுவிற்கு சம்மதமில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் சேகர்பாபுவின் மருமகனான சதீஷை,பெண்ணை மிரட்டிய வழக்கில் சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். இது தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜக அண்ணாமலை பேட்டியில், அமைச்சர் சேகர்பாபுவின் மகள் முதலில் என்னிடம்தான் உதவிக்கேட்டு வந்தார். இது குடும்பவிஷயம், குடும்பவிவகாரத்தில் நாங்கள் தலையிடமாட்டோம். இதில் அரசியல் செய்யவிரும்பவில்லை. எனவே உங்கள் தந்தை மற்றும் பெரியவர்களை வைத்துப்பேசிக்கொள்ளுங்கள். அல்லது கோர்ட்டுக்குச்செல்லுங்கள் என்றுக்கூறி அனுப்பி வைத்தேன். நான் இப்போதும் இதுகுறித்து பேச விரும்பவில்லை. ஆனால் அந்த இளைஞருக்கு தொல்லைக்கொடுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

    அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது - அண்ணாமலை குற்றச்சாட்டு 

    மேலும் பேசிய அவர், குடும்ப விவகாரத்தில் போலீசை வைத்து பிரஷர் கொடுக்கிறார்கள். பழைய புகார்களை கொண்டு வழக்குப்பதிவு செய்து வாரண்ட் போட்டு அந்த இளைஞரை கைது செய்வதோடு, அப்பெண்ணிற்கு மன அழுத்தம் கொடுக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு டிஜிபி'க்கு உத்தரவிடவேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, முதல்வர் இதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பல நீதிமன்றங்களில் திமுக'வினை சார்ந்தோர் என்மீது வழக்கு போட்டுள்ளார்கள். இதுவரை ரூ.1,461 கோடி இழப்பீடு வழக்குகள் போடப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். திமுக பைல்ஸ்-2 ஜூலை மாதம் வெளியிடப்படும். புதிய அமைச்சர்கள் இம்முறை புகார்கள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சேகர் பாபு
    பாஜக அண்ணாமலை
    தமிழ்நாடு

    சேகர் பாபு

    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு  தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  தமிழ்நாடு
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி தமிழ்நாடு

    பாஜக அண்ணாமலை

    பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்குப்பதிவு  திமுக
    கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்  கர்நாடகா
    சட்ட நடவடிக்கைக்கு தயார் - திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை  அரசியல் நிகழ்வு
    திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை  திமுக

    தமிழ்நாடு

    'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  இந்தியா
    இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்? ஹூண்டாய்
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  கல்லூரி மாணவர்கள்
    திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு எடப்பாடி கே பழனிசாமி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023