NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு 
    தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு

    தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு 

    எழுதியவர் Nivetha P
    Oct 17, 2023
    07:19 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது நிர்வாக காரணங்களால் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

    இந்நிலையில் தற்போது 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 10 மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதன்படி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அதே போல் மதுரை மாநகராட்சி ஆணையரான பிரவீன்குமார் சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த கே.தர்பகராஜ் தற்போது உயர்கல்வித்துறை துணை செயலாளராக இடமாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளார்.

    இடமாற்றம் 

    திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா சென்னைக்கு இடமாற்றம் 

    இதனை தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி ஆணையராக தற்போது ஷேக் அப்துல் ரஹ்மான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, கோவைக்கு மாநகராட்சி ஆணையராக எம்.சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடலூர் கூடுதல் ஆட்சியராக பதவி வகிக்கப்பட்டிருந்த எல்.மதுபாலன் தற்போது மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா தற்போது சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், பொள்ளாச்சி சார் ஆட்சியரான பிரியங்கா திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் தமிழக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குனர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    தமிழக அரசு

    மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார்  தமிழகம்
    செப்டம்பர் 18, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான அரசாங்க விடுமுறையை அறிவித்த தமிழக அரசு  பண்டிகை
    ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு  ராமநாதபுரம்

    தமிழ்நாடு

    நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம்தொடங்கியது இலங்கை
    அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல் கர்நாடகா
    ஜெருசலம் பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் இஸ்ரேல்
    நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025