NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உடலநலம் பாதிக்கப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்களுக்கு உதவி தொகை: தமிழக அரசு அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உடலநலம் பாதிக்கப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்களுக்கு உதவி தொகை: தமிழக அரசு அறிவிப்பு 
    உடலநலம் பாதிக்கப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்களுக்கு உதவி தொகை

    உடலநலம் பாதிக்கப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்களுக்கு உதவி தொகை: தமிழக அரசு அறிவிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 29, 2023
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் உள்ள கட்டுமான தொழிலார்களின் நலவாரியம் மூலமாக, தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, உதவித்தொகை அறிவித்துள்ளது, தமிழக அரசு.

    அதன்படி, ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் அதிக பட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியானது.

    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், உறுப்பினர்களாக பதிவு செய்தவர்கள், குறிப்பாக 60 வயதிற்கு மிகாமல் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் தீவிர நோயால் பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்தால், அவர்களுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படும்.

    இதற்காக அரசு சார்பில் ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    card 2

    கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி 

    தீவிர நோய்களான, இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்று நோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்க வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்கள் முதற்கட்டமாக உதவித்தொகை பெறுவார்கள்.

    இந்த திட்டம், தற்போது மூன்று ஆண்டுகள் வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    நிதி உதவி பெற விரும்பும் கட்டுமான தொழிலாளர்கள், தங்கள் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை, தீவிர நோய் பாதிப்பிற்கான அரசு மருத்துவர் சான்று, மற்றும் தற்போது மேற்கொண்டு வரும் சிகிச்சை முறைகளுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து, நலவாரிய ஆணையரிடம் மனு தரவேண்டும்.

    அவர்களுக்கான நிதி உதவி, அவரவர் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    தமிழக அரசு

    திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு எடப்பாடி கே பழனிசாமி
    சென்னை தலைமை செயலகத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்  தமிழ்நாடு
    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது - மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி தமிழ்நாடு
    ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது - அமைச்சர் மா.சுப்ரமணியம்  மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    செந்தில் பாலாஜி கைது விவகாரம் - நோட்டீஸ் விடுத்த மனித உரிமை ஆணையம் மின்சார வாரியம்
    கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு  விருதுநகர்
    அறுவை சிகிச்சை நிறைவு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025