NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்

    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்

    எழுதியவர் Nivetha P
    Feb 11, 2023
    07:47 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்ரீ பெரும்பதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறுவழி சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரியும், மத்திய அரசின் திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், ஸ்ரீ பெரும்பதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறுவழி சாலை பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்.

    ஒப்பந்ததாரர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே நிலவும் பிரச்சனையால் பணிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த சாலையின் தற்போதைய நிலை மிகமோசமாக உள்ளதால் உடனடியாக இந்த ஆறுவழி சாலை பணிகளை துரிதப்படுத்தி செய்துமுடிக்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    கோரிக்கை கடிதம்

    சாலைகளை நல்ல முறையில் பராமரிக்க உத்தரவிட வேண்டும்

    இதனை தொடர்ந்து அந்த கடிதத்தில், மேலும் சாலையை நல்ல முறையில் பராமரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து கடிதத்தில், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ரீ பெரும்பதூர் மற்றும் சின்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் இதுபோன்ற மோசமான சாலை பராமரிப்பு காரணமாக சுங்கச்சாவடி கட்டணத்தை 50 சதவிகிதமாக குறைத்ததை எடுத்துரைத்துள்ளார்.

    இது போன்ற சாலைகளின் மோசமான நிலை பொதுமக்களின் வசதிக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிதின் கட்காரி
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    நிதின் கட்காரி

    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு சுற்றுச்சூழல்

    தமிழ்நாடு

    பால் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை இதோ...! வணிக செய்தி
    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை கனமழை
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் மாவட்ட செய்திகள்

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025