NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக செயலாளர் இறையன்பு வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக செயலாளர் இறையன்பு வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார் 
    தமிழக செயலாளர் இறையன்பு வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்

    தமிழக செயலாளர் இறையன்பு வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார் 

    எழுதியவர் Nivetha P
    Jun 22, 2023
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு கடந்த 1988ம்ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர்.

    இவருக்கு தற்போது 60 வயதானதால் வரும் 30ம்தேதியோடு தனது பதவியில் இருந்து ஓய்வுப்பெறுகிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இவரையடுத்து, அடுத்த தமிழக செயலாளர் பதவியினை பெறுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரம் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது.

    இந்நிலையில் இறையன்பு அவர்கள் தான் ஓய்வுபெற்ற பின்னர் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது.

    ஆனால் தற்போது அந்த பதவி ஷகில் அக்தருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இறையன்பு தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனிடையே தலைமை செயலாளர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    பெயர் பட்டியல் 

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை

    அதன்படி, இந்த பட்டியலில் முதலிடத்தில் 1986ம்ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா பெயர் உள்ளது.

    இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீடு செய்யும் கழகத்தின் தலைவராகவுள்ளார்.

    2ம் இடத்தில் 1989ம்ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த எஸ்.கே.பிரபாகர் பெயர் இடம்பெற்றுள்ளது.

    இவர் தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார் என்று கூறப்படுகிறது.

    3ம் இடத்தில் 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சிவ்தாஸ் மீனா பெயர் உள்ளது.

    இவர் இப்பொழுது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக உள்ளார் என்று தெரிகிறது.

    இவர்களுள் சிவ்தாஸ் மீனா தான் தமிழக தலைமை செயலாளராக நியமிக்க அதிகளவு வாய்ப்புள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(ஜூன்.,22) தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் திமுக
    நீட் தேர்வு: மாநிலத்தில் 2ஆம் இடத்தை பிடித்த கட்டிடத் தொழிலாளியின் மகள் நீட் தேர்வு
    'செந்தில் பாலாஜி மனைவியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்': நீதிமன்றம் திமுக
    அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி திமுக

    மு.க ஸ்டாலின்

    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  இந்தியா
    கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற முதல்வர் விழுப்புரம் விரைகிறார்  விழுப்புரம்
    கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு  விழுப்புரம்
    கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து  விழுப்புரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025