NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு 
    தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு

    தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Dec 21, 2023
    08:40 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம்.,தேதிகளில் அதி கனமழை பெய்தது.

    இதனால் அந்த மாவட்டங்கள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

    குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளநீர் பாதிப்பு அதிகம் என்பதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள்.

    மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிச.,21) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, 5வது நாளாக இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    விடுமுறை 

    நெல்லை மாவட்ட பள்ளி விடுமுறை குறித்த தகவல்கள்

    இதனை தொடர்ந்து, நெல்லையில் 1 முதல் 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    9-12ம் வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    மேலும் திருநெல்வேலியில் மழை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட 8 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டுமா?இல்லையா?என்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்றும் ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    மழையால் புத்தகங்கள் சேதம் அடைந்திருந்தால் அதுகுறித்த விவரங்களை தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே, தூத்துக்குடி வெள்ளம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் நாளை(டிச.,22)முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் திருச்செந்தூர் ரயில் தடத்தில் அடுத்த ஒரு வாரத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பள்ளிகளுக்கு விடுமுறை 

    #BREAKING | தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 5வது நாளாக விடுமுறை அறிவிப்பு!#SunNews | #TuticorinRains pic.twitter.com/vKkuR0zrWK

    — Sun News (@sunnewstamil) December 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    தூத்துக்குடி
    கனமழை
    வெள்ளம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திருநெல்வேலி

    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்  காவல்துறை
    திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு  கோவில்கள்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு  காவல்துறை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் காவல்துறை

    தூத்துக்குடி

    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  காவல்துறை
    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது  காவல்துறை
    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு  அரசு மருத்துவமனை
    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா  தமிழ்நாடு

    கனமழை

    சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது  சென்னை
    புழல் ஏரியின் தடுப்பு சுவர் சேதம்; கரை உடையும் அபாயம் சென்னை
    சென்னையில் நடக்கவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு  கார்

    வெள்ளம்

    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தேனி
    கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு பெங்களூர்
    மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு  பருவமழை
    கோத்தகிரி சாலைகளில் சீரமைப்பு பணிகள் நிறைவுற்று, போக்குவரத்து துவங்கியது  நீலகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025