NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை 
    உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை

    உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை 

    எழுதியவர் Nivetha P
    May 19, 2023
    07:09 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுடில்லி உச்ச நீதிமன்றம் கே.வி.விஸ்வநாதன்(57) அவர்களை நீதிபதியாக தேர்வு செய்துள்ளது.

    அதன்படி அவர் இன்று(மே.,19) பதவியேற்று கொண்டார்.

    பொள்ளாச்சி மாவட்டத்தினை சேர்ந்த அவர், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது கவனிக்கத்தக்கது.

    இவருடைய தந்தை கே.வி.வெங்கடராமன் கோவை அரசு வழக்கறிஞராக இருந்தவர், 1991-96ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசின் வழக்கறிஞராக கிரிமினல் வழக்குகளை கையாண்டுள்ளார்.

    இந்நிலையில் எப்படியாவது உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றவேண்டும் என்னும் எண்ணத்துடன் 1988ல் டெல்லி சென்றார் கே.வி.விஸ்வநாதன்.

    அங்கு அவர் தமிழர்கள் அதிகம் தங்கும் ஆர்.கே.புரத்தில் வாடகை ரூமில் தங்கியுள்ளார்.

    காலை-மதிய உணவுகளை கோர்ட்டிலும், இரவு உணவினை அவர் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள மெஸ்'ஸிலும் சாப்பிட்டுள்ளார்.

    1990ல் முதன்முதலாக சரத்குமாருக்கு எதிரான வழக்கில், விகடன் பத்திரிக்கைக்கு ஆதரவாக ஆஜரானார் விஸ்வநாதன்.

    நீதிபதி 

    பல வழக்குகளை வாதாடி வெற்றி பெற்றவர் கே.வி.விஸ்வநாதன் 

    இவரது வாதத்தினை கேட்ட பிரெஸ் கவுன்சில் விகடனுக்கு எதிரான வழக்கினை தள்ளுபடி செய்தது.

    உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்கள் தகுதிக்கு குறைந்த பிரெஸ் கவுன்சில் போன்ற இடங்களில் வாதாட ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    ஆனால் இவர் ஒப்புக்கொண்டு வாதாடி வெற்றி பெற்றார்.

    இதனை தொடர்ந்து 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அதிமுக தரப்பிற்காக விசாரணை கமிஷன் முன் ஆஜரானார்.

    உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகளை வாதாடி வெற்றி பெற்றவர்.

    சீனியர் வழக்கறிஞர்களை நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் வழக்கம் சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

    அதன்படியே விஸ்வநாதன் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுவரை 2 தமிழர்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த நிலையில் 3வது நீதிபதியாக பொள்ளாச்சி கே.வி.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    டெல்லி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    உச்ச நீதிமன்றம்

    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம்  இந்தியா
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்  மத்திய அரசு
    திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம் இந்தியா

    டெல்லி

    மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது ஆம் ஆத்மி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025