NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயை இழந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயை இழந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
    வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயை இழந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

    வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயை இழந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 10, 2023
    02:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் வாய்ஸ் கால்கள் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் வருவாயனது 80%-மும், SMS சேவை மூலம் பெறும் வருவாயானது 94%-மும் குறைந்திருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    2013 ஜூன் காலாண்டு முதல், 2022 டிசம்பர் காலாண்டு வரையிலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெற்ற வருவாயின் அடிப்படையில் இந்த தகவல்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன.

    வாட்ஸ்அப், கூகுள் மீட் மற்றும் ஃபேஸ்டைம் உள்ளிட்ட இணைய வசதியுடன் கூடிய காலிங் சேவைகளின் பயன்பாடே வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் வருவாய் குறைந்ததற்கான காரணமாக இருக்கலாம் என ட்ராயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    வணிகம்

    மொபைல் டேட்டாவின் மூலம் பெறும் வருவாய் அதிகரிப்பு:

    வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயானது குறைந்திருக்கும் இந்த காலத்தில், மொபைல் டேட்டாவின் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் வருவாயானது 2013-ல் 8.1%-தத்தில் இருந்து 2022-ல் 85.1%-ஆக பத்து மடங்கு உயர்ந்திருக்கிறது.

    மேலும், ஒரு பயனாளரிடம் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் சராசரிய வருவாயும் (ARPU) இந்த பத்து ஆண்டுகளில் 41% உயர்ந்து ரூ.146.96-ஆக இருக்கிறது.

    2013-ல் இது ரூ.123.77-ஆக இருந்தது. 2013-ல் இந்த ARPU-வில் 58.6%-தத்துடன் வாய்ஸ் கால்களே அதிக பங்கு வகித்து வந்த நிலையில், தற்போது அது 10.1%-ஆகக் குறைந்திருக்கிறது.

    அதே போல் SMS-கள் மூலம் பெறப்படும் ARPU-உம் 2013-ல் ரூ.3.99-ல் இருந்து, தற்போது 23 பைசவாகக் குறைந்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிராய்
    இந்தியா
    வணிகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டிராய்

    புதிய ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான ஏலத்தை நடத்த ட்ராயை அணுகும் தொலைத்தொடர்புத் துறை இந்தியா

    இந்தியா

    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட் ஃப்ளிப்கார்ட்
    இந்தியாவின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக லல்லியன்சுவாலா சாங்டே தேர்வு கால்பந்து
    "கோ-கோ பாதி, கபடி பாதி" : இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு அட்யா பட்யா பற்றி தெரியுமா? கபடி போட்டி

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 20 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 21 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 22 தங்கம் வெள்ளி விலை
    புதிதாக 200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் உபர் நிறுவனம் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025